Wednesday, August 08, 2007

சேரல்

டூ வீலரில் என்னை இறுக்கப்பிடித்துகொள்ளச்சொல்லி
உன்னை கடற்கரைக்கு அழைத்து செல்கிறேன்...,

மணலில் உன் அருகில் அமர்ந்து
உன் கண்களை உற்றுப்பார்க்கிறேன்

உன் கரு விழிகளில் என்னை
உருட்டி வைத்து விளையாட்டுக்காட்டுகிறாய்...

உன் கூந்தல் களைத்து
விரல்களால் கோதுகிறேன்

உன் நீள கூந்தல் கொண்டு
என்கைகளை கட்டிபோடுகிறாய்

உன்னை இறுக தழுவி
ஆக்ரமிக்க முயற்சிக்கையில்
உன் மெலிந்த உடலால் என்
உடலைகட்டி கடலில் தூக்கி வீசிவிடுகிறாய்......

உலகம் காணாம்ல் போய்விட்டது.........