Thursday, September 06, 2007

நீ பரிசளித்த பாலைவனம்

மனைவியாக நீபரிசளித்த
சம்மதங்கள்
கருவேலங்காட்டிலிருந்து
கடல்கடந்து படர்ந்திருக்கிறது
நீளமான பாதையாக

நீயும் நானும் உடல்கள் தாண்டி
உயிர்களை தழுவிக்கொண்டு
பசியாரினோம்

நீ இல்லாத என் இரவை
விழித்தபடியே வைத்திருக்கிறது
உன்மல்லிகை வியர்வை

உடல் பகிர்ந்து தணிந்த தாகத்தின் ஞாபகம்
அதிகமாகி அழிந்த நிமிடங்களில்
உன் தனிமை என்னை அறைந்து செல்கிறது

உதடு பதிந்த கன்னத்திவலைகளில்
நீ ஓங்கி கடிக்கிறாய்

உன் நகைகளையும் சேர்த்து
அடகு வைத்து என்னை அனுப்பிவிட்டு
வெம்பி கிடக்கிறாய் உன்னைப்பகிர்ந்த படுக்கையில்..

படுக்கைகளின் வெப்பங்கள்தான்
நான் ஒட்டகம் மேய்க்கும் பாலைவனம்..

No comments: