Thursday, December 15, 2011
உலக சினிமா :நாள் 2
இயக்குனர்: Ahmed Maher
Hassan-னின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று நாட்களின் நிகழ்வுதான் மையம். 1948-ல் ஒருநாள்... எகிப்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பிரதிபலிக்கிறது; 1973-ல் ஒருநாள்... அக்டோபர் 6 போரை காட்டுகிறது; 2001-ல் ஒருநாள்... 9/11 சம்பவத்தைச் சொல்கிறது. இந்த மூன்று நாட்களும் ஹுசைனின் தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்த தினங்கள். தேடல், கடமை, காதல், அன்பு துயரம் என பல உணர்வுகளை வெளிப்படுத்த வைத்தவை அவை.
*
3.00 PM
GOOD MEN,, GOOD WOMEN (1995 / தைவான்/108 நி)
இயக்குனர் : Hsiao-hsien Hou
Chiang Bi-Yu-ன் உண்மைக் கதை. 1940-களில் தனது கணவருடன் சீனா சென்று ஜப்பானிய எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொள்கிறாள். போர்க் காலத்தில் தனது குழந்தையை தத்துக் கொடுக்க வேண்டியச் சூழல். போர், அரசியல் மாற்றங்கள் அவளது வாழ்க்கையின் போக்கை எப்படி நிர்ணயிக்கிறது என்பதே படம். தைவானின் வரலாறு, தேசிய அடையாளம் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை அலசுகிறது இப்படம்.
*
5.30 PM
AMNESTY (அல்பேனியா/ 2011/ 83 நி)
இயக்குனர் : Bujar Alimani
அல்பேனியாவின் புதிய சட்டம், சிறையில் தம்பதிகளை மாதம் ஒருமுறை தாம்பத்யம் வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. சிறையில் அடைக்கப்பட்ட தனது கணவரை எல்சாவும், தனது மனைவியை ஸ்பெடிமும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி சந்திக்கிறார்கள். சட்டவிதிகளின்படி, சிறையில் இருக்கும் தங்களது கணவருடன் மனைவியோ, மனைவியுடன் கணவனோ மாதம் ஒருமுறை உறவாட அனுமதிக்கப்படுவர். தங்கள் இணையைச் சந்திக்க வரும் நாயகியும் நாயகனும் பழகத் தொடங்குகின்றனர். அங்கே உறவு மலர்கிறது. சிக்கல் தொடங்குகிறது. பிறகு..? - அல்பேனிய சட்ட நடைமுறைகள், அங்குள்ள வாழ்க்கை முறை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது!
*
8.00 PM
NO RETURN (2010/ அர்ஜெண்டினா/ 106 நி)
இயக்குனர்: MIGUEL COHAN
ஒரு சிறுவன் மீது கார் மோதிச் செல்கிறது. சிறுவன் சம்பவ இடத்தில் இறக்கிறான். டிரைவரோ தப்பிச் சென்றுவிடுகிறான். அச்சிறுவனின் தந்தை, மீடியாவின் உதவியுடன் தனது மகனுக்கு நீதி கிடைக்கப் போராடுகிறார். அதேவேளையில், ஒரு அப்பாவி குற்றவாளியாக்கப்படுகிறான். சமூக நிலையையும், நீதித்துறையையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் படம்.
*
உட்லண்ட்ஸ் சிம்பொனி
12.45 PM
KING OF DEVILS ISLAND (2010/ நார்வே/ 120 நி)
இயக்குனர்: Marius Holst
Bastoy சிறையில் நடந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். 20-ம் நூற்றாண்டின் தொடக்கம். பாஸ்டோயிலுள்ள காப்பகத்துக்கு வரும் புதிய இளைஞன், கொடூர ஆட்சிக்கு எதிராக அனைவரையும் பொங்கி எழ வைக்கிறான். பிறகு என்ன நிகழ்கிறதே என்பதே திரைக்கதை.
*
3.15 PM
RED SKY (2011/ கிரீஸ்/ 105 நி)
இயக்குனர்: Laya Yourgou
Aris, Stelios இருவரும் நண்பர்கள். தெற்கு கிரீஸுக்குச் சென்று தொழிலில் பெரிய ஆளாக வேண்டும் என்பது அவர்கள் கனவு. அதை நிறைவேற்றப் புறப்படுகிறார்கள். அது, வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் வலம் வரும் கலர்ஃபுல்லான இடம். பெண்களை நாடுவது இல்லை என்பது இருவரின் சபதம். ஆனால், அடுத்தடுத்த அனுபவங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
*
5.45 PM
HEAT WAVE (2011/ பிரான்ஸ்/ 92 நி)
இயக்குனர் : Jean-Jacques Jauffret
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நவீன டிராமா வகையறா சினிமா. வளரிளம் பவருத்தில் Stphane and Luigi என்ற இரு கசின் சகோதரர்கள், ஓய்வு பெற்றவரான Georges, Luigi-ன் காதலி Amelie, அவளது அம்மா Anne. காயங்கள், வலிகள், அச்சங்கள், கவலைகள் என துயரங்களால் நிரம்பிய இவர்களது வாழ்க்கையைச் சொல்லும் படம்.
*
8.00 PM
KISS ME AGAIN (2010/ இத்தாலி/ 139 நி)
இயக்குனர் : Gabriele Muccino
Carlo, Giulia மற்றும் அவர்களது நண்பர்கள்... 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் எப்படி இருக்கிறது? வெவ்வேறு கதாப்பாத்திரங்களை நுட்பமாக கையாண்டிருப்பது படத்தின் பலம் என விமர்சனங்கள் கூறுகின்றன.
****
ஃபிலிம் சேம்பர்
12.30 PM
வெங்காயம் (2011/தமிழ்/126 நி)
இயக்குனர் : சங்ககிரி ராஜ்குமார்
சாமியார்கள், ஜோசியம், பரிகாரம் இவை எல்லாம் உரித்துப் பார்த்தால் ஒன்றும் இல்லை என்று சொல்வதுதான்... 'வெங்காயம்!’
ஒரு கிராமத்தில் அருள்வாக்கு, ஜோசியம் சொல்லும் சாமியார்கள் வரிசையாகக் கடத்தப்படுகிறார்கள். சாமியார்களைக் கடத்தியவர்கள் யார், ஏன் கடத்தினார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்னும் முடிச்சுகளை அடுத்தடுத்து உரிக்கிறது வெங்காயம்.
விகடன் விமர்சனம் : வெங்காயம்
*
3.30 PM
அவன் இவன் (2010/ தமிழ்/ 127 நி)
இயக்குனர் : பாலா
ஆர்யா... கும்பிடுறேன் சாமி. விஷால்... வால்டர் வணங்காமுடி. இருவருக்கும் அப்பா ஒருவர், அம்மாக்கள் வேறு வேறு. களவாணிப் பயல்களின் ரகளைகளே படம்!
விகடன் விமர்சனம் : அவன் இவன்
*
6.30 PM
THE MOUNTAIN (2011/ நார்வே/ 73 நி)
இயக்குனர் : Ole Gieaver
இரண்டு பெண்களின் பயணமும், அதைத் தொடர்ந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளுமே படம். முக்கிய கதாப்பாத்திரங்கள் தரும் அனுபவம் வியப்புக்குரியவை. அன்பின் மகத்துவத்தையும் போற்றும் படம். உத்வேகம் என்பதற்கு புதிய அர்த்தம் காண முடியும்.
*
THE DAYS OF DESIRE / (2010/ ஹங்கேரி/ 104 நி)
இயக்குனர் : Jozsef Pacskovszky
கருத்து வேறுபாடுள்ள பணக்கார தம்பதி. அவர்கள் வீட்டில் வேலை செய்யும் Anna. இம்மூவருக்கும் இடையிலான உறவு, சிக்கல்களை விறுவிறுப்பாக சொல்லும் படம்.
ஐநாக்ஸ்
12.15 pm
MY LITTLE PRINCESS
இயக்குனர் : Eva Lonesco
ஈராக் யுத்தத்தில் பங்கேற்று, ஆசையோடு வீடு திரும்பும் ஆரோனை துன்பம் வரவேற்கிறது. அவன் மனைவி சாரா மரணப்படுக்கையில் இருக்க, அவர்களது மகள் ஐரின் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். ஆரோன் ஐரினின் கடைசி நாட்களை சந்தோஷமானதாக மாற்ற மேற்கொள்ளும் போராட்டங்களைச் சொல்லும் படம் இது. அன்பு, கருணை, பாசத்தின் மேன்மையை மென்மையாக உணர்த்தி பார்வையாளர்களின் மனங்களில் இடம்பிடித்த படம் இது.
இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிக் குவித்தது.
*
2.30 pm
RESTLESS
இயக்குனர் : Gus Van Sant
மரணம் நடந்த வீடுகளுக்குப் போவதை வாடிக்கையாகக் கொண்ட ஒருவன், அவனுக்கு நண்பனாக இருக்கும் ஆவி ( இரண்டாம் உலகப் போரில் இறந்த ஜப்பானிய விமானி ), நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண் இந்த மூவருக்கும் இடையிலான சம்பவங்களைச் சொல்லும் சுவாரஸ்யமான படம் இது.
17 GIRLS
இயக்குனர் :Delphine Coulin, Muriel Coulin
பள்ளிச் சிறுமிகள் 17 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பிணிகளாக திட்டமிடுகிறார்கள். அவர்களது மனநிலை, சூழல் ஆகிவற்றைச் சொல்லும் படம் இது. அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது
Wednesday, December 14, 2011
சென்னை பட விழா-1day
படங்களும், அதை பற்றிய குறிப்புகளும்...
உட்லண்ஸ், 11.00 AM
இயக்குனர் : Roman Khrushch
* Lermontov-ன் 'A hero of Our Time' என்ற புகழ்பெற்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். Pechorin-ன் "நான் பெர்சியா பயணிக்கிறேன். போகும் வழியிலேயே நான் இறந்துவிடலாம்," என்ற வரிகளில் துவங்குகிறது கதை. நாயகன் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறான். அந்த நினைவுகள் தருகின்ற பலதரப்பட்ட உணர்வுகளை குறிப்பால் சொல்லும் படைப்பு.
*
5:30 PM -
THE KID WITH A BIKE (பெல்ஜியம்/ பிரான்ஸ்/ இத்தாலி/ 2011)
இயக்குனர்கள் : Jean-Pierre and Luc Dardenne
குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் Cyril, தன்னைக் கைவிட்ட தந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு வெகுவாக உதவுகிறாள், Samantha என்ற பெண். அடுத்தடுத்து திருப்பங்கள் வியக்கவைப்பவை. மனிதத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படைப்பு என்று இப்படத்தை 'தி டெலிகிராப்' புகழாரம் சூட்டியிருக்கிறது. கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டு, Grand Prix விருதைத் தட்டிச் சென்ற படம்!
****
உட்லண்ட்ஸ் சிம்பொனி
10:30 AM
THE THREE WAY WEDDING (பிரான்ஸ்/ 2010)
இயக்குனர்: Jacques Doillon
ஒரு சுவாரசியாமான நாடக ஆசிரியர். அவரது புதிய நாடகத்தில் நடிக்கும் இருவரில் ஒருவர், அவருடைய முன்னாள் மனைவி. மற்றொருவர், அந்த முன்னாள் மனைவியின் காதலன். இம்மூவரை மையமாகக் கொண்டு நகரும் கதை.
*
OGUL - THE SON (துருக்கி/2011)
இயக்குனர் : Atilla Cengiz
காதலியைச் சந்திப்பதற்காக, முதல் முறையாக தனது சொந்த ஊரில் இருந்து புறப்படும் 18 வயது இளைஞன் Soner. ஆபத்து, துயரம் என பல திருப்பங்களைத் தரும் பயணம் அது. இரு மகன்களை கதை, இரு தந்தைகளின் கதையாவதே ஹைலைட்.
*
3.15 PM
நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலையான காலகட்டத்தில், அப்போதைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைக் காட்டும் படைப்பு. உணர்வுப்பூர்வமான இளைஞர்களின் கதைகளைச் சொல்வதோடு, தென் ஆப்பிரிக்காவின் அன்றைய சமூக - அரசியலை சிறுவர்களின் பார்வையில் காட்டியிருப்பது சிறப்பு.
*****
ஃபிலிம் சேம்பர் -
10 :00 AM
THE WEEPING WILLOW (2005/ ஈரான்)
இயக்குனர் : Masjid Majidi
38 ஆண்டுகளாக பார்வையற்றவராக இருந்த கல்லூரிப் பேராசியருக்கு, சிகிச்சை ஒன்றில் திடீரென பார்வை கிடைக்கிறது. உலகை கண்களால் பார்க்கத் தொடங்கிய பிறகு அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது, இப்படம். சுவாரசியமான கதைக் களம். ஈரானிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருக்கிறது. உலக அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படம்.
*
12.30 PM
இயக்குனர் : Andreas Arnstedt
வறுமையில் வாடும் குடும்பத்தில் 11 வயது சிறுவன் படும் துயரமே படத்தின் மையம். குடிக்கு அடிமையான அம்மாவோ மனநல காப்பகத்தில். குழந்தைக்கு படிப்பைக் கூட தரமுடியாத அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அப்பா இறந்தது வெளியில் தெரிந்தால், தன்னை குழந்தைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என அந்தச் சிறுவனுக்கு அச்சம். அப்பாவின் மரணத்தை பற்றி வெளியில் தெரியாமல், சடலத்துடன் இரு வாரங்கள் கழிக்கிறான். பிறகு? இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது, திரைக்கதை.
*
SHADOWS IN PARADISE (பின்லாந்து/ 1986)
இயக்குனர் : Aki Kaurismäki
கதையில் நாயகன், உறவுகள் யாருமில்லாத துப்புறவு தொழிலாளி. சூப்பர் மார்க்கெட்டில் கிளார்க் ஆக இருக்கிறாள், நாயகி. இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால், தங்கள் காதலை இருவருமே மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். அதன் விளைவை உணர்வுப் பூர்மாக சொல்கிறது, இந்த ரொமான்டிக் படம். 1987-ல் சிறந்த படத்துக்கான Jussi Awards வென்றுள்ளது.
*
சத்யம் ஸ்டூடியோ 5
10:00 AM
இயக்குனர் : Aki Kaurismäki
பின்னிஷ் இசைக் கலைஞர்கள் குழு ஒன்று, உலகப் புகழ் பெறவும், பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா பயணிக்கிறது. சுவாரசியம் திருப்பங்களும் நிறைந்த அந்தப் பயணம் தான் படம். Empire magazine's "The 100 Best Films Of World Cinema" in 2010 பட்டியலில் 88-வது இடத்தில் இடம்பெற்றது, இப்படத்தின் சிறப்புகளுள் ஒன்று!
*
ஐநாக்ஸ் ஸ்க்ரீன் 3
10.00 AM
JOANNA (போலந்து/ 2010)
இயக்குனர் Feliks Falk
போர்ச் சூழல். போருக்குச் சென்ற கணவன் திரும்பவில்லை. அவன் நிலை என்னவென்று தெரியாத இளம் மனைவி, ஒரு யூதச் சிறுமியை காப்பற்ற முயற்சிக்கிறாள். அதற்காக ஜெர்மானிய அதிகாரியை காதலிக்க வேண்டிய கட்டாயம். அரசியல், போர், அவலம்... இத்தகைய பின்புலத்தில் அன்பை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படம்!
*
12.15 PM
AMNESTY (அல்பேனியா/ 2011)
இயக்குனர் : Bujar Alimani
சிறையில் அடைக்கப்பட்ட தனது கணவரை எல்சாவும், தனது மனைவியை ஸ்பெடிமும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி சந்திக்கிறார்கள். அல்பேனியாவின் சட்டவிதிகளின்படி, சிறையில் இருக்கும் தங்களது கணவருடன் மனைவியோ, மனைவியுடன் கணவனோ மாதம் ஒருமுறை உறவாட அனுமதிக்கப்படுவர். தங்கள் இணையைச் சந்திக்க வரும் நாயகியும் நாயகனும் பழகத் தொடங்குகின்றனர். அங்கே உறவு மலர்கிறது. பிறகு..? - அல்பேனிய சட்ட நடைமுறைகள், அங்குள்ள வாழ்க்கை முறை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது! படங்களும், அவை பற்றிய
சென்னை பட விழா-1day
படங்களும், அதை பற்றிய குறிப்புகளும்...
உட்லண்ஸ், 11.00 AM
இயக்குனர் : Roman Khrushch
* Lermontov-ன் 'A hero of Our Time' என்ற புகழ்பெற்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். Pechorin-ன் "நான் பெர்சியா பயணிக்கிறேன். போகும் வழியிலேயே நான் இறந்துவிடலாம்," என்ற வரிகளில் துவங்குகிறது கதை. நாயகன் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறான். அந்த நினைவுகள் தருகின்ற பலதரப்பட்ட உணர்வுகளை குறிப்பால் சொல்லும் படைப்பு.
*
5:30 PM -
THE KID WITH A BIKE (பெல்ஜியம்/ பிரான்ஸ்/ இத்தாலி/ 2011)
இயக்குனர்கள் : Jean-Pierre and Luc Dardenne
குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் Cyril, தன்னைக் கைவிட்ட தந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு வெகுவாக உதவுகிறாள், Samantha என்ற பெண். அடுத்தடுத்து திருப்பங்கள் வியக்கவைப்பவை. மனிதத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படைப்பு என்று இப்படத்தை 'தி டெலிகிராப்' புகழாரம் சூட்டியிருக்கிறது. கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டு, Grand Prix விருதைத் தட்டிச் சென்ற படம்!
****
உட்லண்ட்ஸ் சிம்பொனி
10:30 AM
THE THREE WAY WEDDING (பிரான்ஸ்/ 2010)
இயக்குனர்: Jacques Doillon
ஒரு சுவாரசியாமான நாடக ஆசிரியர். அவரது புதிய நாடகத்தில் நடிக்கும் இருவரில் ஒருவர், அவருடைய முன்னாள் மனைவி. மற்றொருவர், அந்த முன்னாள் மனைவியின் காதலன். இம்மூவரை மையமாகக் கொண்டு நகரும் கதை.
*
OGUL - THE SON (துருக்கி/2011)
இயக்குனர் : Atilla Cengiz
காதலியைச் சந்திப்பதற்காக, முதல் முறையாக தனது சொந்த ஊரில் இருந்து புறப்படும் 18 வயது இளைஞன் Soner. ஆபத்து, துயரம் என பல திருப்பங்களைத் தரும் பயணம் அது. இரு மகன்களை கதை, இரு தந்தைகளின் கதையாவதே ஹைலைட்.
*
3.15 PM
நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலையான காலகட்டத்தில், அப்போதைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைக் காட்டும் படைப்பு. உணர்வுப்பூர்வமான இளைஞர்களின் கதைகளைச் சொல்வதோடு, தென் ஆப்பிரிக்காவின் அன்றைய சமூக - அரசியலை சிறுவர்களின் பார்வையில் காட்டியிருப்பது சிறப்பு.
*****
ஃபிலிம் சேம்பர் -
10 :00 AM
THE WEEPING WILLOW (2005/ ஈரான்)
இயக்குனர் : Masjid Majidi
38 ஆண்டுகளாக பார்வையற்றவராக இருந்த கல்லூரிப் பேராசியருக்கு, சிகிச்சை ஒன்றில் திடீரென பார்வை கிடைக்கிறது. உலகை கண்களால் பார்க்கத் தொடங்கிய பிறகு அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது, இப்படம். சுவாரசியமான கதைக் களம். ஈரானிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருக்கிறது. உலக அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படம்.
*
12.30 PM
இயக்குனர் : Andreas Arnstedt
வறுமையில் வாடும் குடும்பத்தில் 11 வயது சிறுவன் படும் துயரமே படத்தின் மையம். குடிக்கு அடிமையான அம்மாவோ மனநல காப்பகத்தில். குழந்தைக்கு படிப்பைக் கூட தரமுடியாத அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அப்பா இறந்தது வெளியில் தெரிந்தால், தன்னை குழந்தைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என அந்தச் சிறுவனுக்கு அச்சம். அப்பாவின் மரணத்தை பற்றி வெளியில் தெரியாமல், சடலத்துடன் இரு வாரங்கள் கழிக்கிறான். பிறகு? இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது, திரைக்கதை.
*
SHADOWS IN PARADISE (பின்லாந்து/ 1986)
இயக்குனர் : Aki Kaurismäki
கதையில் நாயகன், உறவுகள் யாருமில்லாத துப்புறவு தொழிலாளி. சூப்பர் மார்க்கெட்டில் கிளார்க் ஆக இருக்கிறாள், நாயகி. இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால், தங்கள் காதலை இருவருமே மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். அதன் விளைவை உணர்வுப் பூர்மாக சொல்கிறது, இந்த ரொமான்டிக் படம். 1987-ல் சிறந்த படத்துக்கான Jussi Awards வென்றுள்ளது.
*
சத்யம் ஸ்டூடியோ 5
10:00 AM
இயக்குனர் : Aki Kaurismäki
பின்னிஷ் இசைக் கலைஞர்கள் குழு ஒன்று, உலகப் புகழ் பெறவும், பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா பயணிக்கிறது. சுவாரசியம் திருப்பங்களும் நிறைந்த அந்தப் பயணம் தான் படம். Empire magazine's "The 100 Best Films Of World Cinema" in 2010 பட்டியலில் 88-வது இடத்தில் இடம்பெற்றது, இப்படத்தின் சிறப்புகளுள் ஒன்று!
*
ஐநாக்ஸ் ஸ்க்ரீன் 3
10.00 AM
JOANNA (போலந்து/ 2010)
இயக்குனர் Feliks Falk
போர்ச் சூழல். போருக்குச் சென்ற கணவன் திரும்பவில்லை. அவன் நிலை என்னவென்று தெரியாத இளம் மனைவி, ஒரு யூதச் சிறுமியை காப்பற்ற முயற்சிக்கிறாள். அதற்காக ஜெர்மானிய அதிகாரியை காதலிக்க வேண்டிய கட்டாயம். அரசியல், போர், அவலம்... இத்தகைய பின்புலத்தில் அன்பை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படம்!
*
12.15 PM
AMNESTY (அல்பேனியா/ 2011)
இயக்குனர் : Bujar Alimani
சிறையில் அடைக்கப்பட்ட தனது கணவரை எல்சாவும், தனது மனைவியை ஸ்பெடிமும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி சந்திக்கிறார்கள். அல்பேனியாவின் சட்டவிதிகளின்படி, சிறையில் இருக்கும் தங்களது கணவருடன் மனைவியோ, மனைவியுடன் கணவனோ மாதம் ஒருமுறை உறவாட அனுமதிக்கப்படுவர். தங்கள் இணையைச் சந்திக்க வரும் நாயகியும் நாயகனும் பழகத் தொடங்குகின்றனர். அங்கே உறவு மலர்கிறது. பிறகு..? - அல்பேனிய சட்ட நடைமுறைகள், அங்குள்ள வாழ்க்கை முறை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது! படங்களும், அவை பற்றிய
உட்லண்ஸ், 11.00 AM
இயக்குனர் : Roman Khrushch
* Lermontov-ன் 'A hero of Our Time' என்ற புகழ்பெற்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். Pechorin-ன் "நான் பெர்சியா பயணிக்கிறேன். போகும் வழியிலேயே நான் இறந்துவிடலாம்," என்ற வரிகளில் துவங்குகிறது கதை. நாயகன் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறான். அந்த நினைவுகள் தருகின்ற பலதரப்பட்ட உணர்வுகளை குறிப்பால் சொல்லும் படைப்பு.
*
5:30 PM -
THE KID WITH A BIKE (பெல்ஜியம்/ பிரான்ஸ்/ இத்தாலி/ 2011)
இயக்குனர்கள் : Jean-Pierre and Luc Dardenne
குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் Cyril, தன்னைக் கைவிட்ட தந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு வெகுவாக உதவுகிறாள், Samantha என்ற பெண். அடுத்தடுத்து திருப்பங்கள் வியக்கவைப்பவை. மனிதத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படைப்பு என்று இப்படத்தை 'தி டெலிகிராப்' புகழாரம் சூட்டியிருக்கிறது. கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டு, Grand Prix விருதைத் தட்டிச் சென்ற படம்!
****
உட்லண்ட்ஸ் சிம்பொனி
10:30 AM
THE THREE WAY WEDDING (பிரான்ஸ்/ 2010)
இயக்குனர்: Jacques Doillon
ஒரு சுவாரசியாமான நாடக ஆசிரியர். அவரது புதிய நாடகத்தில் நடிக்கும் இருவரில் ஒருவர், அவருடைய முன்னாள் மனைவி. மற்றொருவர், அந்த முன்னாள் மனைவியின் காதலன். இம்மூவரை மையமாகக் கொண்டு நகரும் கதை.
*
OGUL - THE SON (துருக்கி/2011)
இயக்குனர் : Atilla Cengiz
காதலியைச் சந்திப்பதற்காக, முதல் முறையாக தனது சொந்த ஊரில் இருந்து புறப்படும் 18 வயது இளைஞன் Soner. ஆபத்து, துயரம் என பல திருப்பங்களைத் தரும் பயணம் அது. இரு மகன்களை கதை, இரு தந்தைகளின் கதையாவதே ஹைலைட்.
*
3.15 PM
நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலையான காலகட்டத்தில், அப்போதைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைக் காட்டும் படைப்பு. உணர்வுப்பூர்வமான இளைஞர்களின் கதைகளைச் சொல்வதோடு, தென் ஆப்பிரிக்காவின் அன்றைய சமூக - அரசியலை சிறுவர்களின் பார்வையில் காட்டியிருப்பது சிறப்பு.
*****
ஃபிலிம் சேம்பர் -
10 :00 AM
THE WEEPING WILLOW (2005/ ஈரான்)
இயக்குனர் : Masjid Majidi
38 ஆண்டுகளாக பார்வையற்றவராக இருந்த கல்லூரிப் பேராசியருக்கு, சிகிச்சை ஒன்றில் திடீரென பார்வை கிடைக்கிறது. உலகை கண்களால் பார்க்கத் தொடங்கிய பிறகு அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது, இப்படம். சுவாரசியமான கதைக் களம். ஈரானிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருக்கிறது. உலக அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படம்.
*
12.30 PM
இயக்குனர் : Andreas Arnstedt
வறுமையில் வாடும் குடும்பத்தில் 11 வயது சிறுவன் படும் துயரமே படத்தின் மையம். குடிக்கு அடிமையான அம்மாவோ மனநல காப்பகத்தில். குழந்தைக்கு படிப்பைக் கூட தரமுடியாத அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அப்பா இறந்தது வெளியில் தெரிந்தால், தன்னை குழந்தைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என அந்தச் சிறுவனுக்கு அச்சம். அப்பாவின் மரணத்தை பற்றி வெளியில் தெரியாமல், சடலத்துடன் இரு வாரங்கள் கழிக்கிறான். பிறகு? இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது, திரைக்கதை.
*
SHADOWS IN PARADISE (பின்லாந்து/ 1986)
இயக்குனர் : Aki Kaurismäki
கதையில் நாயகன், உறவுகள் யாருமில்லாத துப்புறவு தொழிலாளி. சூப்பர் மார்க்கெட்டில் கிளார்க் ஆக இருக்கிறாள், நாயகி. இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால், தங்கள் காதலை இருவருமே மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். அதன் விளைவை உணர்வுப் பூர்மாக சொல்கிறது, இந்த ரொமான்டிக் படம். 1987-ல் சிறந்த படத்துக்கான Jussi Awards வென்றுள்ளது.
*
சத்யம் ஸ்டூடியோ 5
10:00 AM
இயக்குனர் : Aki Kaurismäki
பின்னிஷ் இசைக் கலைஞர்கள் குழு ஒன்று, உலகப் புகழ் பெறவும், பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா பயணிக்கிறது. சுவாரசியம் திருப்பங்களும் நிறைந்த அந்தப் பயணம் தான் படம். Empire magazine's "The 100 Best Films Of World Cinema" in 2010 பட்டியலில் 88-வது இடத்தில் இடம்பெற்றது, இப்படத்தின் சிறப்புகளுள் ஒன்று!
*
ஐநாக்ஸ் ஸ்க்ரீன் 3
10.00 AM
JOANNA (போலந்து/ 2010)
இயக்குனர் Feliks Falk
போர்ச் சூழல். போருக்குச் சென்ற கணவன் திரும்பவில்லை. அவன் நிலை என்னவென்று தெரியாத இளம் மனைவி, ஒரு யூதச் சிறுமியை காப்பற்ற முயற்சிக்கிறாள். அதற்காக ஜெர்மானிய அதிகாரியை காதலிக்க வேண்டிய கட்டாயம். அரசியல், போர், அவலம்... இத்தகைய பின்புலத்தில் அன்பை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படம்!
*
12.15 PM
AMNESTY (அல்பேனியா/ 2011)
இயக்குனர் : Bujar Alimani
சிறையில் அடைக்கப்பட்ட தனது கணவரை எல்சாவும், தனது மனைவியை ஸ்பெடிமும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி சந்திக்கிறார்கள். அல்பேனியாவின் சட்டவிதிகளின்படி, சிறையில் இருக்கும் தங்களது கணவருடன் மனைவியோ, மனைவியுடன் கணவனோ மாதம் ஒருமுறை உறவாட அனுமதிக்கப்படுவர். தங்கள் இணையைச் சந்திக்க வரும் நாயகியும் நாயகனும் பழகத் தொடங்குகின்றனர். அங்கே உறவு மலர்கிறது. பிறகு..? - அல்பேனிய சட்ட நடைமுறைகள், அங்குள்ள வாழ்க்கை முறை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது!
Saturday, December 03, 2011
ஈழத்தில் ஆட்டிலறி கைப்பற்றி ஆமிக்குத் திருப்பியடித்த புலிகள்!
வரலாற்றின் பாதையில் தமிழர் தம் வீரம் பண்டார வன்னியனின் பின்னர் கரிகாலன் எனும் நாமத்தினூடாகத் தான் உலக அரங்கில் உச்சரிக்கப்பட்டது. புலிகளின் வளர்ச்சி, புலிகளின் திறமைகள், புலிகளின் திட்டமிடல்கள் என அனைத்துமே உலகின் பார்வைக்கும், இலங்கை இராணுவத்தின் பார்வைக்கும் இலகுவில் உய்த்தறிய முடியாத புதிராக இருந்த காலங்கள் அவை. ஓர் இன மானத்தின் அடையாளமாக, வீரத்தின் குறியீடாக விடுதலைப் புலிகள் ஈழத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்று அழியாச் சுடராக மக்கள் மனங்களினுள் வாழ்கின்றார்கள். புலிகளின் பல்லைப் பிடுங்கியதாகவும், புலிகள் பலமிழந்து விட்டதாகவும் உலக அரங்கிலும், இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த மக்கள் மத்தியிலும் சிங்கள அரசு தனது பிரச்சார நடவடிக்கையினை முடுக்கி விட்டிருந்த காலப் பகுதி அது.
1995ம் ஆண்டின் இறுதிக் காலங்களில் யாழ்ப்பாணக் குடா நாட்டினை விட்டுப் புலிகள் முற்று முழுதாக பின்னகர்ந்து, வன்னிப் பகுதியினுள் தமது படையணி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ஒன்றிணைத்து இயங்கத் தொடங்குகின்றார்கள். ஈழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், தமிழ் மக்களுக்கும் பாரிய தலை வலியாகவும், அச்சமூட்டும் ஓர் விடயமாகவும் குண்டு வீச்சு விமானங்களுக்கு அடுத்த நிலையில் இருந்தது தான் இந்த ஆட்டிலறி எனச் சொல்லப்படும் பீரங்கி உந்து கணைச் செலுத்திகளாகும். ஆங்கிலத்தில் Artillery Shell எனவும், தமிழில் பீரங்கி எனவும், வன்னியில் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட தூய செந்தமிழ்ச் சொற்கள் வரிசையில் உந்துகணைச் செலுத்தி, எறிகணைகள் எனவும் சிறப்பிக்கப்படுவது தான் இந்த ஆட்டிலறி ஷெல் ஆகும், போராளிகளால் ஆட்டி எனச் செல்லமாக அழைக்கப்பட்டதும் இது தான்.
புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என உலக அரங்கில் யாழ்ப்பாணக் குடா நாட்டினைச் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கைப்பற்றிய காலப் பகுதியில் லக்ஸமன் கதிர்காமரை வைத்து இலங்கை அரசு புலிகளின் நடவடிக்கையினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரச்சாரப் போரினை முனைப்புடன் மேற் கொண்டிருந்தது. மறு புறத்தில் யாழ்ப்பாண வெற்றியினைத் தொடர்ந்து வன்னிக்குள் காலடி வைத்து புலிகளின் வாலை ஒட்ட நறுக்கி காடுகளுக்குள் வைத்தே புலிகளின் வரலாற்றினை முடிக்கலாம் என ஜெனரல் அனுருத்த ரத்வத்த சூளுரைத்து ( முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மாமன்) வன்னி முற்றுகையினை ஆரம்பித்தது இலங்கை இராணுவம். ஈழ மக்களின் இருப்பிடங்களை நசுக்குவதற்கும் இந்த ஆட்டிலறி எறிகணைகளே பெரும் பங்கு வகித்தன.
குடா நாடு படையினர் வசம் வருவதற்கு முன்னரான ஒவ்வோர் படை நடவடிக்கையின் போதும் மக்கள் ஆட்டிலறி ஷெல்கள் எப்போது யார் மீது எங்கே வந்து வீழும் என ஒவ்வோர் நொடிப் பொழுதும் அஞ்சிப் பயந்து வாழ்ந்தார்கள். வட போர் அரங்கில் பலாலி விமான தரைப் படை கூட்டுத் தலமையகம், காங்கேசன் துறை கடற் படைத் தளம், மயிலிட்டி இராணுவ முகாம் ஆகியவை இந்த ஆட்டிலறி ஷெல்களை மக்கள் குடியிருப்புக்கள் மீது ஏவுவதில் முக்கிய பங்கு வகித்தன. இதே வேளை ஆனையிறவு – பரந்தன் கூட்டுப் படைத் தளமும் (1996 இற்கு முன்பதாக) அந் நாளில் கிளாலி கடல் நீரேரியூடாக வன்னிக்குள்ளும், யாழ்ப்பாணத்திற்குள்ளும் நுழைவோர் மீதும் ஆட்டிலறி தாக்குதல்களை மேற் கொள்ளும் தளங்களாக அமைந்திருந்தன. புலிகள் வசம் ஆட்டிலறிகள் இல்லையே என்னும் குறை புலிகளை விட, அக் காலத்தில் புலிகளை நேசித்த மக்கள் மனங்களைத் தான் வாட்டிக் கொண்டிருந்தது.
வெளி நாட்டில் ஆட்டிலறியினை வாங்கி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வருமளவிற்கு புலிகள் ஆட்டிலறி தொடர்பில் ஈடுபாடு காட்டவும் இல்லை. ஆட்டிலறியினை கடல் வழிப் பயணத்தினூடாக வெளி நாட்டின் கறுப்புச் சந்தையில் வாங்கி புலிகள் பகுதிக்குள் கொண்டு வருவதற்குரிய சாத்தியக் கூறுகள் அக் காலத்தில் புலிகளுக்கு இருந்தாலும்; அதற்கு வேண்டிய ஷெல்களைத் தயாரிப்பதென்பது அப்போது புலிகளுக்குச் சிரமானதாகவே இருந்தது. புலிகள் தமது சொந்தத் தயாரிப்பாக கடுமையான முயற்சிகளின்பின்னர் பசிலன் 2000 எனும் மோட்டால் ஷெல்லினை 1990 களில் கண்டு பிடித்தார்கள். யாழ்ப்பாணம் கோட்டைச் சமரின் போது குறுந் தூர வீச்செல்லை கொண்ட இந்த மோட்டார் ஷெல்லினைப் புலிகள் பரீட்சித்துப் பார்த்து வெற்றியும் கண்டார்கள். ஆனால் இந்தப் பசிலன் ஆயுதமானது ஸ்ரீலங்கா இராணுவத்தின் வசமிருந்த 88mm, 121mm, 131 Or 132mm ஆட்டிலறிகளின் முன் தூசாகவே இருந்தது.
இலங்கை இராணுவத்தின் வசம் நீண்ட தூர ஆட்டிலறிகள் இருக்கையில் புலிகள் பசிலன் 2000 இற்கு வேண்டிய வளங்களை உருவாக்குவதற்கே கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தில் தென்மராட்சியில் கச்சாய் – கொடிகாமம் வீதியில் அமைந்துள்ள முகாம் ஒன்று யாழ்ப்பாணக் குடா நாட்டின் வீழ்ச்சிக்கு முன்பதாக புலிகளின் மோட்டார் ஷெல்களுக்கு வேண்டிய வெடி மருந்துகளைத் தயாரிக்கும் மையமாகச் செயற்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் ஒவ்வோர் படையெடுப்பின் போதும் இலங்கை இராணுவம் தனது முன்னேற்றத்தினை அறிவிக்கும் முகமாக ஆட்டிலறிகளை ஏவிக் கொண்டிருந்தது. மழை போன்று கண் மூடித் தனமாக இலங்கை இராணுவம் வெளி நாடுகளிடமிருந்து பெற்ற ஷெல்களை ஏவிக் கொண்டிருக்கையில் எதிர் சமர் புரிந்து முன்னேறி வரும் படையினரை விரட்டி அடிப்பதென்பது புலிகளுக்கு அப்போது சவாலனா விடயமாகவே இருந்தது.
மக்கள் மனங்களில் இந்த ஆட்டிலறிகள் புலிகள் வசம் வந்தால் அப்போது பலாலி கூட்டுப் படைத் தளம் மீது புலிகள் தாக்குதல் நடாத்த வசதியாக இருக்குமே எனும் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணக் குடா நாட்டின் வீழ்ச்சி வரை புலிகள் வசம் அந்த ஆட்டிலறிகள் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. புலிகள் கைகளுக்குப் பீரங்கிகள் எவ்வாறு கிடைத்தது? புலிகள் பீரங்கிகளை எப்படிக் கைப்பற்றினார்கள்?
இது தொடர்பில் அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்! எதிர் பார்த்திருங்கள்!
நன்றி: நாற்று வலைப்
Friday, September 02, 2011
எனது பள்ளிகூட ஆசிரியர் திரு. தெய்வசிகாமணி அவர்களின் கானல் காடு பற்றி....
கானல்காடு ஒரு புதிய நவீனம்
கானல்காடு
நாவல்
கோ.தெய்வசிகாமணி
நடவு வெளியீடு
269,காமராஜ் நகர்,
ஆலடி சாலை,
விருத்தாசலம், 606001
போன்; 9789635570
விலை ரூ.300/-
தண்ணீரே ஓடாத, ஒரு ஆற்றின் குறுக்கே, மிகப்பெரிய நீண்ட பாலத்தையும், சாலையில் எப்போதும் புழுதியுமாக இருக்கும் விருத்தாச்சலம் என்ற ஒரு சிறிய நகரில் - அந்த ஊரின் பெரும்பான்மை மனிதர்களைப்போல கறுத்த தோல்நிறம் கொண்டு, மிக குள்ளமான நசுங்கிய தோற்றம் கொண்ட, கோ.தெய்வசிகாமணி, தமிழுக்கு, ஒரு புதுவகையான நவீனத்தை தந்திருக்கிறார்.
1884ல் பிறந்து 1924ல் படுகொலை செய்யப்பட்ட ஆறுமுக நாட்டார் என்ற ஒரு சாமான்ய மனிதனின் கதையை, அந்த மனிதன் வாழ்ந்து மறைந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆறுமுகநாட்டார் சுற்றி அலைந்த ஆறு மாவட்டங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, பலமைல் தூரம் பயணித்து, பல நூறு முதியவர்களை, ஆறுமுக நாட்டாரின் மூன்று தலைமுறை வாரிசுகளை நேரில் சந்தித்து, அவரைப் பற்றி கேட்டறிந்து, அவற்றையெல்லாம் ஒலிநாடாவில் பதிவு செய்து, அரசாங்க ஆவணங்களில் ஆறுமுக நாட்டாரைப் பற்றி காணக்கிடைத்த செய்திகளையும் ஒன்றினைத்து, செவி வழி செய்திகளையும், கிடைத்த ஆவணக்குறிப்புகளையும் வைத்து கானல்காடு என்ற பெயரில், அவரின் கதையை, அவர் வாழ்ந்த வாழ்க்கையை, யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, மிக யதார்த்தமாக, இயல்பாக, நிகழ்ச்சிகளாக்கி, இரத்தமும் சதையுமாய், ஒரு நவீனத்தை உருவாக்கி தந்திருக்கிறார்.
தமிழுக்கு இது புதுசு.
நம்முடைய வரலாற்று நவீனங்கள், பல குப்பையானவை சிறுகை வடிவத்தில் கூட, தமிழில், உலகதரத்தோடு போட்டி போட முடிந்திருக்கிறது. ஆனால் நவீனம் என்ற இலக்கிய வகையில், நம்முடைய சாதனை, மிக உன்னதமானவை என்று நம்மால் சொல்லிக் கொள்ள முடியாது. இதற்கான காரணிகள் பலவாக இருக்கலாம்.
1879ல் எழுதப்பட்ட தமிழின் முதல் நவீனம் என்று சொல்லப்படுகிற பிரதாப முதலியார் சரித்திரம் முதலாக, கடந்த 120 ஆண்டுகளில் வெளிவந்த எத்தனை தமிழ் நவீனங்களை, நம்மால் இன்றைக்கும் கொண்டாட முடியும் என்று, இலக்கிய வாசகர்கள் அனைவரும், அவரவர் மனநிலைக்கேற்ப, வாசகத்தன்மைக்கேற்ப, ஒரு பட்டியல் போட்டுப் பார்த்தால், இதன் நிதர்சனம் நமக்கு தெரியவரும்.
சண்முக சுந்தரம் 1940களில், நவீனம் படைப்பதை ஒரு கலையாக மாற்ற முயற்சித்து, எழுதி நாகம்மாளை இப்போது நினைத்துப் பார்க்கலாம். அதற்குப் பிறகு, ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தமிழில் வெளிவந்த, நவீனங்களை, பரிசீலனைக்கு உள்ளாக்கி, சிலவற்றை தெரிவு செய்ய நமக்கு வாய்ப்புண்டு. நவீனத்தைப் பொறுத்தவரை, தமிழின் இலக்கிய வரலாற்றில், கடந்த 120 ஆண்டுகளில், ஒரு பத்து நவீனத்தை நாம் தெரிந்தெடுத்தால், கானல்காடு அந்த பத்தில் ஒன்றாய் இருக்கும்.
1880களில் கடலூரை மையமாக கொண்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளாக, தற்போது ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிற, அந்த நிலப்பகுதிகளில், 1924 வரை - ஒரு நாற்பதாண்டுகளில், - அந்தப் பகுதிகளில் வாழ்ந்த எல்லா இன மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்நிலைகள் பற்றியும், அவர்களுடைய அப்போதைய வாழ்க்கை மதிப்பீடுகளைப் பற்றியும், குரூரங்களைப் பற்றியும், நிலஉடமையும், சாதியமும் தோற்றுவித்த ஆண்டான் அடிமை வாழ்நிலை சிக்கல்களையும், கானல்காட்டில் விவரித்ததைப் போல, வேறு எங்கும், ஒரு கலைவடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.
அப்போது வாழ்ந்திருந்த அந்த மனதிர்களின் மனவோட்டத்தை, அதன் சிதறல்களை, இவ்வளவு சிறப்பாக உரையாடல் வடிவத்தில், கதை சொல்லும் வடிவத்தில், காட்சிகளாக்கியும் மிக நேர்த்தியான ஒரு நெசவு சாத்தியமா என்று திகைப்பாயிருக்கிறது. பேராசிரியர் பழமலை, ஒரு வாய்ப்பேச்சில் குறிப்பிட்டதைப்போல, இனி ஆறுமுக நாட்டாரின் வரலாறென்றால், அது கானல் காட்டில் தெய்வசிகாமணி எழுதிய வரலாறுதான், என்ற முடிவுக்கு நம்மை நகர்த்தும் புதினம் இது. பாஸ்கரன் எளிமையாகவும் ஆழமாகவும் குறிப்பிட்ட மாதிரி, "ஆங்கிலேயன் ஆறுமுக நாட்டாரை, சிறை வைத்தான். கோ.தெய்வசிகாமணி, 80 ஆண்டுகள் கழித்து, கானல் காட்டின் மூலமாக ஆறுமுக நாட்டாரை விடுவித்திருக்கிறார்.
ஆங்கிலேயன் அவரை படுகொலை செய்தான்,
கோ.தெய்வசிகாமணி, கானல்காடு நவீனம் மூலமாக,
ஆறுமுக நாட்டாரை உயிர்ப்பித்திருக்கிறார்.''
என்ற அளவோடு, இந்த நவீனத்தின் சிறப்பு முடிவதில்லை.
செம்மொழி ராமசாமி, இந்த நூலின் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல, இந்த புதினத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வழக்காற்று சொற்கள், இதுவரை எந்த அகராதியிலும் இடம் பெறாதவை.
ஏறத்தாழ இதே காலகட்டத்தில் பிறந்து, ஆறுமுக நாட்டார் படுகொலை செய்யப்பட்ட அதே 1924ம் ஆண்டு மறைந்த ஜெர்மானிய எழுத்தாளன் காஃப்காவின் "விசாரணை'' என்ற புதினத்தின், நினைவுகளை கானல்காடு எனக்குள் தோற்றுவித்தது என்று தமிழ்நாடன் குறிப்பிடுகிறார்.
இந்த புதினத்தில் சொல்லப்படுகிற, உணவு வகைகள், பழக்கவழக்கங்கள் கலாச்சார பிண்ணனி ஆகிய பலவற்றை, ஒரு புனைதலில் தெய்வசிகாமணி புணர்நிர்மானம் செய்திருக்கும் செய்நேர்த்தி இன்னுமொரு அழகு.
உலக புதின வரலாற்றில், சரித்திரத்தை இலக்கியமாக்குகிற செய்நேர்த்தியின் உச்சம், நார்வே நாட்டைச் சேர்ந்த ஸீக்ரிட் யூண்ட்ùஸட் என்ற நாவலாசிரியையிடம் அபரிமிதமாக இருந்தது. 1929ல் அந்த நாவலசிரியைக்கு நோபல்பரிசு கொடுத்த போது, அந்த நவீனத்தை படித்த, வாசகர்களுக்கும் விமரிச்சர்களுக்கு இது குறித்து ஒருமித்த அபிப்பிராயம் இருந்தது.
வரலாற்றை புதினமாக்குகிற போது, அந்த புதினத்தின் வாசிப்பு ஈர்ப்புத் தன்மையை நிலை நிறுத்திக் கொள்வது. புதினத்தில் ஒரு சவாலான தன்மை கொண்டது. அதை கானல் காட்டின் ஆசிரியர், தன்னுடைய லாகவமான ஆற்றொழுக்கான நடையின் மூலமாக, சாத்தியமாக்கியிருக்கிறார் என்று சொல்லலாம்.
கதைத்தலைவன் சென்ற நூற்றாண்டில் உயிரோடும் உணர்வோடும் இந்த மண்ணில் உலவிய ஒரு மனிதர். அவரின் பலங்களையும், பலவீனங்களையும், ஒரு சார்பின்றி, துல்லியமாக பதியவைக்கிற முயற்சியில் ஆசிரியருக்கு வெற்றிதான்.
கதைத்தலைவன், ஒரு ஒளிவட்டத்திற்குள் அடைக்கிற முயற்சியில் இவர் ஈடுபடவில்லை. அதையும் மீறி, தலைமறைவு வாழ்க்கையில், ஓடி, ஓடி, பதுங்கி, பதுங்கி வாழ்ந்த இந்த மனிதனை நமக்கு நேசிக்க தோன்றுகிறது. சாதிவித்தியாசம் பாராமல், அந்த தலைமறைவு வாழ்க்கையில், எல்லா சாதியினரும் ஆறுமுக நாட்டாருக்கு உதவுவதும், ஆறுமுக நாட்டாரும் மனிதநேய விகசிப்போடு எல்லோருக்கும் உதவியாய் இருப்பதும், மிக இயல்பாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சாதிக்காரணை சாதிக்காரனே காட்டிக் கொடுக்கும் தொடர் வரலாற்றுப் பிழையில், ஆறுமுகநாட்டாரும் சிக்கிக் கொள்வது, எந்த காலத்திலும் மாறாத வரலாற்று போக்கை நமக்கு உணர்த்துகிறது.
இந்த நூலின் அறிமுக விழாவில், கொடுக்கூர் ஆறுமுக நாட்டாரை போற்றும் வகையில் உணர்வு பொங்க கொடுக்கூரிலிருந்து சென்னை பெருநகரத்திற்கு பேருந்து பிடித்து வந்து, கோயில் பூசாரி முதல் பஞ்சாயத்து தலைவர் வரை, திரளாக கலந்து கொண்ட அந்த கொடுக்கூர் கிராமத்து மக்களைப் பார்க்கிற போது, ஆறுமுக நாட்டார், 80 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், அவர்கள் மனதில் எத்தனை ஆழமாக உணர்வு பூர்வமாக கலந்து இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை நேரிலேயே பார்க்க முடிந்தது.
இந்த புதினத்தில் அடிவானம் கூட செம்மண் நிறமாய்த்தான் ஆசிரியருக்கு தோன்றுகிறது.
இனி, இந்த புதினத்தில் நான் முயங்கிய சில இலக்கிய வரிகள்.
"ஊரில் பலபேரிடம் நெருப்பு மூட்டும் வளர்ப்பு அஞ்சலை என்ற பெண் பாத்திரத்தின் வர்ணிப்பு''
"ஆடுமாடு மேய்க்கிறதுங்க ஆவாரந்தழையை ஒடிச்சு
போட்டு தெளிஞ்ச தண்ணீயை குடிக்கும்''
"அரிசி கடன் கொடுத்தாலும் கொடுப்பா, ஆம்பிடையானை
கடன் கொடுப்பாங்களா''
மாவட்ட கண்காணிப்பாளர், குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட
ஆறுமுக நாட்டாரைப் பற்றி, நினைக்கிற பொழுதில்:
"இவன் குற்றம் செய்திருக்க முடியாது. நாம் சட்டத்தின் கண்கள் கொண்டுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. நியாயத்தின் பக்கம் நிற்க முடியாமல் செய்துவிடுகிறது.''
சட்டத்தின் கண்களும் நியாயத்தில் கண்களும் வெவ்வேறானதா என்ற நிரந்தரக் கேள்வி அப்போதும் இப்போதும் இருப்பதை மேலேகண்ட வரிகளில், வாசகர்களை உணர வைக்கிறார்.
"மரங்களை கைகழுவி காணாமல் போகும் சருகுகள்''
"அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் சுமந்தாகணும்
இது நாட்டான்நீதி, விதுரநீதி அது தான். சூத்திர நீதி''
"அதிகாரத்துக்கு கட்டுப்படுறவன், எதிர்த்து நிக்காதவன்
எல்லோரும் திருடன்தான்''
"அவன் நினைவு வரும் போதெல்லாம், ஊவாமுள்ளாய்
நெருடச் செய்கிறது.''
"போதையில் தான் சாதிவந்து முன்னிற்கும்
அப்புறம் அடிதடியிலே வந்து நிக்கும்.''
"அய்யனார் கோயில் முன் வைத்திருந்த
மண்குதிரைகள் திடுமென உயிர்பெற்று
தங்களை குறிவைத்து ஓடிவரும் காட்சியும்,
இவர்களை குளம்படியில் கூழாக்கி
விரையும் காட்சியும் நிழலாடின''
"ஓடையவன் பார்க்காத வாழை
ஒரு முழம் கட்டைம்பாங்களே''
"தவறிப்போன ஆடு மாதிரி கத்தற சத்தம்''
"பொழைக்க வழியில் லேன்னா, எல்லா வழியும்
நல்ல வழிதான். தப்பு, சரிங்கிறதெல்லாம்
வயிறு நெறைஞ்சவனுக்குத் தான் நமக்கில்லே''
"கல்லாந்தரிசிலே ஒழைச்சு ஓடாத் தேயுறாங்க
மண் வயித்துக்கு வஞ்சனை தான் செய்யுது.''
"என் ஏட்டை எமன் பார்க்கமறந்துட்டானே''
"பேச்சின் தர்க்கம் பல்வேறு புதிர்களுக்குள்
நெட்டித்தள்ளியது. பாசிகுளம் வழியாக
வெள்ளாற்றில் இறங்கும்போது, வழிதவறிவிடும்.
வெள்ளநீர் அரித்து அரித்து, செம்மண்கரைந்து
பலகால்களாக பிரிந்து இறங்கினால் சுற்றிச்சுற்றிச்செல்ல
இறங்கியவழியும் வெளியேறும் வழியும் மறந்துவிடும்.''
"நாளை என்பது யமன் கணக்கு''
"நகமும் சதையும் போல இருந்தாங்க
நகமே சதையை பதம்பார்த்துன்னா,
சதையழுகினா நகத்துக்கும் கேடு''
"கீரியும் பெருச்சாளியும் வளையிலிருந்து
புறப்படும் நேரம்.''
"மணலை கயிறா எப்படி திரிக்க முடியும்?
வாய்க்காலிலே கெடக்குதில்லே நீர்முதுள்ளிச்செடி.
அதோட வெதைகளை மணலோடு சேர்த்து
தண்ணீர் ஊத்தி பக்குவமா பெசைஞ்சா
மணல் நாம, விரும்புற வடிவத்துக்கு வருது''.
கொள்ளிடம் பெரிய ஆறு. ஒவ்வொரு நதிக்கும்
"பின்னால் உள்ள சங்கீதமும் பயங்கரமும் இதற்குமுண்டு
யாருக்கும் அடங்காத கிடாரி போல ஓடிக்கொண்டிருக்கும்.''
"காலம் வாழ்க்கையை வைத்து சதுரங்கம் ஆடுகிறது.''
"எடக்கன் புள்ள பெத்தவளுக்கு தலைச்சன்
புள்ளக்காரி மருத்துவம் சொல்ற மாதிரி யிருக்குதா?''
"இதுசரி இது தப்புங்கிறதெல்லாம் இன்னொரு
கால மாற்றத்திலே அர்த்தமில்லாம போயிடுது.''
"நம்ம அப்பன், பாட்டன், பூட்டன் எல்லாரையும்
மறந்துட்டோம். வம்சக்கொடியை மூணு
தலைமுறைக்கு மேல நம்மால சொல்லமுடியலே
வேர் இத்துப்போன கொடி மரத்திலே படர்ந்திருந்தாலும்
காஞ்ச சருகாத்தான் உதிரும்.''
"உலகம் உயிர்த்தத்துவத்தின் அழகிய உலைக்களம்.
இவை யொன்றை யொன்று இரையாக்கியே வளரவும் வாழவும் செய்யும்.''
"காரிருளில் நிர்வாணமாய் பறந்த பறவையின் கால்தடத்தை
காற்றில் தேடினாலா கிடைக்கும்?''
"நதியின் போக்கில் ஏதுமறியாது உருண்டோடி
மழுங்கிக்கரையும், கூழாங்கல் என நிசப்தமாய்
கரையும் காலம்''
"ஏகலைவன் மண்பொம்மையிடம் தானே கற்றான்?
மண்ணுக்குள் புதைந்தபோன ஏதோ ஒரு
மண்பொம்மையின் நிழல் தானோ நாம்''
இந்த புதினம் உரைநடையில் ஒரு காவியம். இதன் காவிய அழகையெல்லாம், இவ்வளவு குறைவான வார்த்தைகளில் விவரிக்க இயலாது. பாரதம் வருகிறது. கண்ணகி கதைக்கு புதிய அர்த்தம் தோண்டி எடுக்கப்படுகிறது. பாஞ்சாலியின் சீற்றமும், கனலும் அனலாய் தெறித்து, மிக நீண்ட உவமைகளாகிறது. துர்ச்சொப்பன விவரிப்பு, பக்கம் பக்கமாய், நாகமாய், வளைந்து நெளிந்து சீறுகிறது. கும்மிருட்டில் அம்மணம் மறைவதும் புதினக்கவிதையாகிறது.
ஆறுமுக நாட்டாரின் வாழ்வின் அடர்த்திக்குள் நுழைந்து, வாழ்வையும், நம்மையும், இந்த புதினத்தில் தரிசிக்க வைக்கிறார் ஆசிரியர்.
வாழ்வின் யதார்த்திலிருந்து படைப்பின் யதார்த்தத்தை உருவாக்க முனைந்து வெற்றி கண்டிருக்கிறார் தெய்வசிகாமணி.
அவரே என்னுரையில் சொல்லியதைப்போல, ஆறு மாவட்டங்களில் அறுநூறுக்கு மேற்பட்ட கிராமங்கள் ஆயிரகணக்கான மனிதர்களின் பேச்சு எழுத்தாக உருவாகி, கானல் காடு என்ற உரைநடை காவியப்புதினமாருக்கிறது.
இந்தக்காவியத்தின் தொண்ணூறு விழுக்காடு பாத்திரங்கள் உண்மையானவை. நாலைந்து பாத்திரங்கள் மாத்திரமே கற்பனையானவை. தமிழ்ப் புதின வரலாற்றில் கானல் காடு ஒரு மைல் கல். புதினத்திற்கான புதிய இலக்கணங்களை படைத்து காவியமாய் உருக்கொண்டிருக்கிறது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஒரு தமிழ்ப்புதினம்.
எஸ்.சுவாமிநாதன்
நன்றி : வடக்கு வாசல்
Monday, July 11, 2011
Friday, June 17, 2011
Sunday, January 09, 2011
செருப்பைக்காட்டிய கமலுக்கு




செருப்பைக்காட்டிய கமலுக்கு எதிப்பைக்காட்டும் அறிவுமதி
"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு...
30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு...
இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..
கமல் படம்.
மன்மதன் அம்பு.
மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு
வந்து விட்@டா@மா
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!
அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்
இந்த
அம்பு...
இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை
உணர்ந்து திருந்துதல் நல்லது.
கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால்
முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.
இந்த மன்மத அம்புவின்
வாயிலாக...
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை
இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி
செய்திருக்கிறார்.
"தமிழ் சாகுமாம்...
தமிழ் தெருப் பொறுக்குமாம்.'
வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்து...
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று...
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..
பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் @பால...
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து..
இறுதியில்
அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!
அது என்ன ஆத்திரம்!
போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்!
அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.
அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!
தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க
வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!
இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூட... நீங்கள்
பெரிய்ய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே!
அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்!
ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!
இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!
ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்...
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!
பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்...
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும்.
ஆனால்
"அவன் தமிழ்
சாக வேவண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்.''
தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!
தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை..
நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்..
"யாதும் ஊரே யாவரும்
கேளிர்' என்று
உலகையே பெருக்கியவர்கள்
உங்கள்.
எங்களைப் பார்த்து
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..
உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்...!
கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்...
இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன.
மோந்து பாருங்கள்.
எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
உங்கள்
படத்தில் வருகிற கைபேசியின் மேல்
வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும்.
கமல்..
நகைச் சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!
ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!
இதில் வேறு... வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!
அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.
இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம்.
சீதையைப் பார்த்து
"உயிரே போகுதே'
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
"உயிரே போகுதே'
பாடுவோம்.
ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!
எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!
அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.
அதற்கு
வருவான்
வருவான்
வருவான்
"தலைவன்
வருவான்!'
இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.
நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!
நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வேவண்டாமா?
அன்புடன்
அறிவுமதி
நன்றி; அறிவுமதி