Saturday, January 12, 2008

"வனப்பேச்சி" ஞாபகப்படுத்திய என் கிராமத்து நாட்கள்


என் கால்சட்டை காலத்திற்கு அழைத்துசென்று அழகு பார்த்தது புத்தகம். வனப்பேச்சி படித்துமுடித்ததும்
நான் மறுபடியும் என் கீணனூர் முழக்க ஊர்சுற்றிவிட்டு ,
ம்ணிமுத்தாற்றில் ஓரி அடித்துவிட்டு ,
கலுங்கு குட்டையில் மீன்பிடிதுவிட்டு,
ஏரிவயற்காட்டில் நண்டுபிடித்துவிட்டு,
தய்யானோடையில் கொரக்காத்தட்டை ஒடித்து பீப்பீ செய்து ஊதிவிட்டு, மணக்காட்டில் மாட்டுக்கு பில் அறுத்துவிட்டு,
ஆடுமாடுகளை பெரிய வாய்க்காமேட்டிற்கு ஓட்டிசென்று மேய்த்துவிட்டு, இரவுவீடு திரும்பி வாசலில் நிலா வெளிச்சத்தில் ராச்சோறு தின்றுவிட்டு, வீதி விளக்கொளியில் "காயேகடுப்பங்காய்"--"உப்பாள் சரணா"--" கபடி" விளையாடிவிட்டு,
மறுபடியும் கொஞ்சம் சோறுசாப்பிட்டுவிட்டு ,
சின்னாச்சி சொல்லும் ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம், அவருக்கு ஏழு பொண்டாட்டியாம், ஏழுப்பேருக்குமே குழந்தை இல்லையாம்........
என்று நீளும் கதையை "ம்" கொட்டி கதைகேட்டபடி தூங்கிப்போகும் அந்த பிஞ்சு நாட்களையெல்லாம் அசைபோட்டப்படி புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வராமல் கிடக்க செய்தது.



புரியாத வார்த்தைகளையிட்டு நிரப்பிவிட்டு கவிதை செய்யும் பல பெண்ணிய கவிதைகளிலிருந்து விலகி, புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளால், புழக்கத்தில் இருக்கும் வாழ்க்கைகளை, அழகழகான நிகழ்வுகளை காட்சியாக்கியிருக்கும் படிமங்கள்,சுண்டகாய்ச்சிய வார்த்தைகள், நகரத்திலிருந்துகொண்டு கிராமங்களை நினைத்து ஏங்கும் இயலாமையும்,பிள்ளைகளை ஊருக்கு அழைத்துசெல்லுபோதே திரும்பி எப்ப வருவோம் என்றகேள்வியை எதிர்க்கொள்ளும் மனசு எந்த மாதிரி மனநிலைக்கு அழைத்து செல்லும் என்றகேள்விக்கு பதிலாக இருக்கும் கவிதைகளையெல்லாம் எப்படி பகிர்ந்துகொள்ளமுடியும் என்ற நேரத்தில் "வனப்பேச்சி" ஒரு நல்ல நண்பனாக,ஒரு நல்லதோழியாக மனசை பகிர்ந்துகொள்கிறது. மடி சாய்ந்து கண்ணயிரும் தாய்மையும், தோள்சாய்ந்து மனசாறும் துணையாகவும் வனப்பேச்சியை பத்திரபடுத்திக்கொள்கிறேன் ரயிலடி அருகில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது ஒற்றை அறையில்....
வீரமணி
சென்னை-17
13-01-08

2 comments:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my site, it is about the CresceNet, I hope you enjoy. The address is http://www.provedorcrescenet.com . A hug.

நளாயினி said...

oo. arumai.