Saturday, March 15, 2008

அடங்க மறுக்கும் திமிர்

அடங்க மறுக்கும் திமிர்

















1

வெயிலேறி
காய்வெடிப்பதற்குள்
கருக்கள் பனி ஈரத்தோடு
எரங்காட்டுக்கு
பயிர் அரிக்கப் போகும்
அக்காள்களின் வயதறியாமல்
அப்பன்கள் குடிக்க போகிறார்கள்
ஒவ்வொரு அந்தியிலும்.














2

விறகுடைக்க
வந்தவெட்டியானின்
பசிஅறியாமல்
பழைய கஞ்சியை
ஊற்றினாள்
ஆண்டைவீட்டு அம்மா.
மூச்சிரைக்க
பிளந்து போட்டவனின்
முன்னால்
விறகுகள் கிடக்கிறது
அடித்து எரிய வைக்க இருக்கும்
ஆண்டைகளின்
மண்டை ஓட்டு கபாலமொத்து.















3

அரைகுறை
ஆடையுடன்வரும்
பெண்களைவேடிக்கை
பார்த்தபடி
"காஃபி டே"யில் குடித்த
காஃபியின் விலை
முப்பது ரூபாய்...
கருக்கலில் சென்று
கரும்புக்குகளை
வெட்டிஉச்சி வெய்யிலில்
வீடுதிரும்பும்அம்மாவுக்கு
கூலிஇருபைத்தைந்து ரூபாய்.

4
துளி நுனி
கொழுந்துஇல்லாமல்
பட்டுப்போய் நிற்கிறது
வேம்பு ,துளசி,நொச்சி
3டி மூவ்மென்டில்
டீ.வீ. பெட்டிக்குள்
உலா வருகிறது
வேம்பு,புதினா,
துளசியைகொண்டு
தயாரானசோப்பு விளம்பரம்.

நன்றி;கீற்று.காம் &TREKEARTH.COM

2 comments:

வனம் said...

வணக்கம் கிலுகிலுப்பை

உங்கள் கவிதைகள் நன்றாக உள்ளன மிக எளிமையான யாறும் யோசிக்க வேண்டிய கருத்துக்களுடன்

நன்றி

வீரமணி said...

நன்றி ராஜராஜன்.உங்கள் வாழ்த்துக்கள் மேன்மேலும் என்னை செழுமை படுத்தும் நன்றி