Saturday, March 29, 2008

நன்றி




மொழி தெரியாது என்றாலும்
நன்றி சொல்லியாக வேண்டும்.
அடுப்படிவேலையொழித்து
திரும்பும்வரை
சன்னல் வழியாக
குழந்தைக்கு
விளையாட்டுக்காட்டிய
அணிலுக்கு.
வீரமணி

2 comments:

சிங். செயகுமார். said...

அடுப்படியில்
இடுப்பொடிய நின்று
இடம் வலம் திரும்புமுன்
இடம் தெரியாமல் போனதே
இங்கே வைத்த ரொட்டி துண்டும்
இரண்டு சாக்லேட்டும்
இன்னும் சற்று நேரத்தில் நிச்சயம்
இசையும் ஒலியுமாய்
சிரிக்கும் குழந்தையின்
அழுகுரல் :-)

வீரமணி said...

நன்றி.கவிதை நன்றாக இருக்கிறது.