Saturday, June 12, 2010

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்














சு.தமிழ்ச்செல்வி
1995_96-ம் வருடம், விருத்தாசலத்தில் செராமிக் தொழில் நுட்பக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில். அண்ணன் கரிகாலனோடு பழகிய ஒரு மாலையில் வீட்டிற்கு அழைத்து சென்று அண்ணி சு.தமிழ்செல்வி,குழந்தைகளாக இருந்த சிந்து,சுடரை அறிமுகப்படுத்த, நானும் அவர்கள் வீட்டில் ஒருவனானேன். தினமும், மாலை வீட்டு வாசலில் கொட்டிகிடந்த மணலில் உட்கார்ந்து ஊர்கதை, உலககதையோடு உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்துவார், அப்போது அண்ணி அவர்கள் எழுதிகொண்டிருந்த "அளம், மாணிக்கம்," கையெழுத்து பிரதியாக எடுத்துவந்து படிக்க கொடுத்த போது, முதல் வாசகனானேன், படித்து முடித்ததும் "நேரமே கிடைக்கலைங்க-ம்பி",- அண்ணன் ஆசைக்கு, ஒரு தொகுப்பாவாவது இந்த வருஷம் கொண்டுட்டு வந்துடணும், என்று சொல்லும்போதே தெரியும் பின்னாளில் மிக பெரிய சாதனைகளை செய்ய தயாரகிறார்கள் என்று..
இன்று உலகம் முழுக்க தனக்கென்று வாசகர்களை ,அடுத்த படைப்பு என்ன என்று எதிர்பார்க்க வைத்திருக்கும் மிக முக்கியமான எழுத்தாளர்.

இவரது படைப்புகள்
1.அளம்
2. மாணிக்கம்
3.கீதாரி
4.கற்றாழை
5.ஆறுகாட்டுதுறை
6.சாமுண்டி
7.கண்ணகி

No comments: