Wednesday, December 14, 2011

சென்னை பட விழா-1day

9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 14-12-11 அன்று திரையிடப்பட்ட
படங்களும், அதை பற்றிய குறிப்புகளும்...

உட்லண்ஸ், 11.00 AM

PECHORIN (2010 / ரஷ்யா)
இயக்குனர் : Roman Khrushch


* Lermontov-ன் 'A hero of Our Time' என்ற புகழ்பெற்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். Pechorin-ன் "நான் பெர்சியா பயணிக்கிறேன். போகும் வழியிலேயே நான் இறந்துவிடலாம்," என்ற வரிகளில் துவங்குகிறது கதை. நாயகன் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறான். அந்த நினைவுகள் தருகின்ற பலதரப்பட்ட உணர்வுகளை குறிப்பால் சொல்லும் படைப்பு.

*

5:30 PM -

THE KID WITH A BIKE (பெல்ஜியம்/ பிரான்ஸ்/ இத்தாலி/ 2011)
இயக்குனர்கள் : Jean-Pierre and Luc Dardenne


குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் Cyril, தன்னைக் கைவிட்ட தந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு வெகுவாக உதவுகிறாள், Samantha என்ற பெண். அடுத்தடுத்து திருப்பங்கள் வியக்கவைப்பவை. மனிதத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படைப்பு என்று இப்படத்தை 'தி டெலிகிராப்' புகழாரம் சூட்டியிருக்கிறது. கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டு, Grand Prix விருதைத் தட்டிச் சென்ற படம்!

****

உட்லண்ட்ஸ் சிம்பொனி

10:30 AM

THE THREE WAY WEDDING (பிரான்ஸ்/ 2010)
இயக்குனர்: Jacques Doillon


ஒரு சுவாரசியாமான நாடக ஆசிரியர். அவரது புதிய நாடகத்தில் நடிக்கும் இருவரில் ஒருவர், அவருடைய முன்னாள் மனைவி. மற்றொருவர், அந்த முன்னாள் மனைவியின் காதலன். இம்மூவரை மையமாகக் கொண்டு நகரும் கதை.

*

12.45 PM

OGUL - THE SON (துருக்கி/2011)
இயக்குனர் : Atilla Cengiz


காதலியைச் சந்திப்பதற்காக, முதல் முறையாக தனது சொந்த ஊரில் இருந்து புறப்படும் 18 வயது இளைஞன் Soner. ஆபத்து, துயரம் என பல திருப்பங்களைத் தரும் பயணம் அது. இரு மகன்களை கதை, இரு தந்தைகளின் கதையாவதே ஹைலைட்.

*
3.15 PM

OTELO BURNING (தென் ஆப்பிரிக்கா/ 2011)


நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலையான காலகட்டத்தில், அப்போதைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைக் காட்டும் படைப்பு. உணர்வுப்பூர்வமான இளைஞர்களின் கதைகளைச் சொல்வதோடு, தென் ஆப்பிரிக்காவின் அன்றைய சமூக - அரசியலை சிறுவர்களின் பார்வையில் காட்டியிருப்பது சிறப்பு.

*****

ஃபிலிம் சேம்பர் -

10 :00 AM

THE WEEPING WILLOW (2005/ ஈரான்)
இயக்குனர் : Masjid Majidi


38 ஆண்டுகளாக பார்வையற்றவராக இருந்த கல்லூரிப் பேராசியருக்கு, சிகிச்சை ஒன்றில் திடீரென பார்வை கிடைக்கிறது. உலகை கண்களால் பார்க்கத் தொடங்கிய பிறகு அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது, இப்படம். சுவாரசியமான கதைக் களம். ஈரானிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருக்கிறது. உலக அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படம்.

*

12.30 PM

THE DISPENSABLES (ஜெர்மெனி/ 2009)
இயக்குனர் : Andreas Arnstedt


வறுமையில் வாடும் குடும்பத்தில் 11 வயது சிறுவன் படும் துயரமே படத்தின் மையம். குடிக்கு அடிமையான அம்மாவோ மனநல காப்பகத்தில். குழந்தைக்கு படிப்பைக் கூட தரமுடியாத அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அப்பா இறந்தது வெளியில் தெரிந்தால், தன்னை குழந்தைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என அந்தச் சிறுவனுக்கு அச்சம். அப்பாவின் மரணத்தை பற்றி வெளியில் தெரியாமல், சடலத்துடன் இரு வாரங்கள் கழிக்கிறான். பிறகு? இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது, திரைக்கதை.

*

3.30 PM

SHADOWS IN PARADISE (பின்லாந்து/ 1986)
இயக்குனர் : Aki Kaurismäki


கதையில் நாயகன், உறவுகள் யாருமில்லாத துப்புறவு தொழிலாளி. சூப்பர் மார்க்கெட்டில் கிளார்க் ஆக இருக்கிறாள், நாயகி. இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால், தங்கள் காதலை இருவருமே மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். அதன் விளைவை உணர்வுப் பூர்மாக சொல்கிறது, இந்த ரொமான்டிக் படம். 1987-ல் சிறந்த படத்துக்கான Jussi Awards வென்றுள்ளது.

*

சத்யம் ஸ்டூடியோ 5

10:00 AM

LENINGRAD COWBOYS GO AMERICA (பின்லாந்து)
இயக்குனர் : Aki Kaurismäki


பின்னிஷ் இசைக் கலைஞர்கள் குழு ஒன்று, உலகப் புகழ் பெறவும், பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா பயணிக்கிறது. சுவாரசியம் திருப்பங்களும் நிறைந்த அந்தப் பயணம் தான் படம். Empire magazine's "The 100 Best Films Of World Cinema" in 2010 பட்டியலில் 88-வது இடத்தில் இடம்பெற்றது, இப்படத்தின் சிறப்புகளுள் ஒன்று!

*
ஐநாக்ஸ் ஸ்க்ரீன் 3

10.00 AM

JOANNA (போலந்து/ 2010)
இயக்குனர் Feliks Falk


போர்ச் சூழல். போருக்குச் சென்ற கணவன் திரும்பவில்லை. அவன் நிலை என்னவென்று தெரியாத இளம் மனைவி, ஒரு யூதச் சிறுமியை காப்பற்ற முயற்சிக்கிறாள். அதற்காக ஜெர்மானிய அதிகாரியை காதலிக்க வேண்டிய கட்டாயம். அரசியல், போர், அவலம்... இத்தகைய பின்புலத்தில் அன்பை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படம்!

*

12.15 PM

AMNESTY (அல்பேனியா/ 2011)
இயக்குனர் : Bujar Alimani


சிறையில் அடைக்கப்பட்ட தனது கணவரை எல்சாவும், தனது மனைவியை ஸ்பெடிமும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி சந்திக்கிறார்கள். அல்பேனியாவின் சட்டவிதிகளின்படி, சிறையில் இருக்கும் தங்களது கணவருடன் மனைவியோ, மனைவியுடன் கணவனோ மாதம் ஒருமுறை உறவாட அனுமதிக்கப்படுவர். தங்கள் இணையைச் சந்திக்க வரும் நாயகியும் நாயகனும் பழகத் தொடங்குகின்றனர். அங்கே உறவு மலர்கிறது. பிறகு..? - அல்பேனிய சட்ட நடைமுறைகள், அங்குள்ள வாழ்க்கை முறை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது! படங்களும், அவை பற்றிய


சென்னை பட விழா-1day

9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 14-12-11 அன்று திரையிடப்பட்ட
படங்களும், அதை பற்றிய குறிப்புகளும்...
உட்லண்ஸ், 11.00 AM

PECHORIN (2010 / ரஷ்யா)
இயக்குனர் : Roman Khrushch


* Lermontov-ன் 'A hero of Our Time' என்ற புகழ்பெற்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். Pechorin-ன் "நான் பெர்சியா பயணிக்கிறேன். போகும் வழியிலேயே நான் இறந்துவிடலாம்," என்ற வரிகளில் துவங்குகிறது கதை. நாயகன் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறான். அந்த நினைவுகள் தருகின்ற பலதரப்பட்ட உணர்வுகளை குறிப்பால் சொல்லும் படைப்பு.

*

5:30 PM -

THE KID WITH A BIKE (பெல்ஜியம்/ பிரான்ஸ்/ இத்தாலி/ 2011)
இயக்குனர்கள் : Jean-Pierre and Luc Dardenne


குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் Cyril, தன்னைக் கைவிட்ட தந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு வெகுவாக உதவுகிறாள், Samantha என்ற பெண். அடுத்தடுத்து திருப்பங்கள் வியக்கவைப்பவை. மனிதத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படைப்பு என்று இப்படத்தை 'தி டெலிகிராப்' புகழாரம் சூட்டியிருக்கிறது. கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டு, Grand Prix விருதைத் தட்டிச் சென்ற படம்!

****

உட்லண்ட்ஸ் சிம்பொனி

10:30 AM

THE THREE WAY WEDDING (பிரான்ஸ்/ 2010)
இயக்குனர்: Jacques Doillon


ஒரு சுவாரசியாமான நாடக ஆசிரியர். அவரது புதிய நாடகத்தில் நடிக்கும் இருவரில் ஒருவர், அவருடைய முன்னாள் மனைவி. மற்றொருவர், அந்த முன்னாள் மனைவியின் காதலன். இம்மூவரை மையமாகக் கொண்டு நகரும் கதை.

*

12.45 PM

OGUL - THE SON (துருக்கி/2011)
இயக்குனர் : Atilla Cengiz


காதலியைச் சந்திப்பதற்காக, முதல் முறையாக தனது சொந்த ஊரில் இருந்து புறப்படும் 18 வயது இளைஞன் Soner. ஆபத்து, துயரம் என பல திருப்பங்களைத் தரும் பயணம் அது. இரு மகன்களை கதை, இரு தந்தைகளின் கதையாவதே ஹைலைட்.

*
3.15 PM

OTELO BURNING (தென் ஆப்பிரிக்கா/ 2011)


நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலையான காலகட்டத்தில், அப்போதைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைக் காட்டும் படைப்பு. உணர்வுப்பூர்வமான இளைஞர்களின் கதைகளைச் சொல்வதோடு, தென் ஆப்பிரிக்காவின் அன்றைய சமூக - அரசியலை சிறுவர்களின் பார்வையில் காட்டியிருப்பது சிறப்பு.

*****

ஃபிலிம் சேம்பர் -

10 :00 AM

THE WEEPING WILLOW (2005/ ஈரான்)
இயக்குனர் : Masjid Majidi


38 ஆண்டுகளாக பார்வையற்றவராக இருந்த கல்லூரிப் பேராசியருக்கு, சிகிச்சை ஒன்றில் திடீரென பார்வை கிடைக்கிறது. உலகை கண்களால் பார்க்கத் தொடங்கிய பிறகு அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது, இப்படம். சுவாரசியமான கதைக் களம். ஈரானிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருக்கிறது. உலக அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படம்.

*

12.30 PM

THE DISPENSABLES (ஜெர்மெனி/ 2009)
இயக்குனர் : Andreas Arnstedt


வறுமையில் வாடும் குடும்பத்தில் 11 வயது சிறுவன் படும் துயரமே படத்தின் மையம். குடிக்கு அடிமையான அம்மாவோ மனநல காப்பகத்தில். குழந்தைக்கு படிப்பைக் கூட தரமுடியாத அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அப்பா இறந்தது வெளியில் தெரிந்தால், தன்னை குழந்தைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என அந்தச் சிறுவனுக்கு அச்சம். அப்பாவின் மரணத்தை பற்றி வெளியில் தெரியாமல், சடலத்துடன் இரு வாரங்கள் கழிக்கிறான். பிறகு? இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது, திரைக்கதை.

*

3.30 PM

SHADOWS IN PARADISE (பின்லாந்து/ 1986)
இயக்குனர் : Aki Kaurismäki


கதையில் நாயகன், உறவுகள் யாருமில்லாத துப்புறவு தொழிலாளி. சூப்பர் மார்க்கெட்டில் கிளார்க் ஆக இருக்கிறாள், நாயகி. இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால், தங்கள் காதலை இருவருமே மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். அதன் விளைவை உணர்வுப் பூர்மாக சொல்கிறது, இந்த ரொமான்டிக் படம். 1987-ல் சிறந்த படத்துக்கான Jussi Awards வென்றுள்ளது.

*

சத்யம் ஸ்டூடியோ 5

10:00 AM

LENINGRAD COWBOYS GO AMERICA (பின்லாந்து)
இயக்குனர் : Aki Kaurismäki

பின்னிஷ் இசைக் கலைஞர்கள் குழு ஒன்று, உலகப் புகழ் பெறவும், பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா பயணிக்கிறது. சுவாரசியம் திருப்பங்களும் நிறைந்த அந்தப் பயணம் தான் படம். Empire magazine's "The 100 Best Films Of World Cinema" in 2010 பட்டியலில் 88-வது இடத்தில் இடம்பெற்றது, இப்படத்தின் சிறப்புகளுள் ஒன்று!

*
ஐநாக்ஸ் ஸ்க்ரீன் 3

10.00 AM

JOANNA (போலந்து/ 2010)
இயக்குனர் Feliks Falk

போர்ச் சூழல். போருக்குச் சென்ற கணவன் திரும்பவில்லை. அவன் நிலை என்னவென்று தெரியாத இளம் மனைவி, ஒரு யூதச் சிறுமியை காப்பற்ற முயற்சிக்கிறாள். அதற்காக ஜெர்மானிய அதிகாரியை காதலிக்க வேண்டிய கட்டாயம். அரசியல், போர், அவலம்... இத்தகைய பின்புலத்தில் அன்பை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படம்!

*

12.15 PM

AMNESTY (அல்பேனியா/ 2011)
இயக்குனர் : Bujar Alimani

சிறையில் அடைக்கப்பட்ட தனது கணவரை எல்சாவும், தனது மனைவியை ஸ்பெடிமும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி சந்திக்கிறார்கள். அல்பேனியாவின் சட்டவிதிகளின்படி, சிறையில் இருக்கும் தங்களது கணவருடன் மனைவியோ, மனைவியுடன் கணவனோ மாதம் ஒருமுறை உறவாட அனுமதிக்கப்படுவர். தங்கள் இணையைச் சந்திக்க வரும் நாயகியும் நாயகனும் பழகத் தொடங்குகின்றனர். அங்கே உறவு மலர்கிறது. பிறகு..? - அல்பேனிய சட்ட நடைமுறைகள், அங்குள்ள வாழ்க்கை முறை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது! படங்களும், அவை பற்றிய

உட்லண்ஸ், 11.00 AM

PECHORIN (2010 / ரஷ்யா)
இயக்குனர் : Roman Khrushch


* Lermontov-ன் 'A hero of Our Time' என்ற புகழ்பெற்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். Pechorin-ன் "நான் பெர்சியா பயணிக்கிறேன். போகும் வழியிலேயே நான் இறந்துவிடலாம்," என்ற வரிகளில் துவங்குகிறது கதை. நாயகன் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறான். அந்த நினைவுகள் தருகின்ற பலதரப்பட்ட உணர்வுகளை குறிப்பால் சொல்லும் படைப்பு.

*

5:30 PM -

THE KID WITH A BIKE (பெல்ஜியம்/ பிரான்ஸ்/ இத்தாலி/ 2011)
இயக்குனர்கள் : Jean-Pierre and Luc Dardenne


குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் Cyril, தன்னைக் கைவிட்ட தந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு வெகுவாக உதவுகிறாள், Samantha என்ற பெண். அடுத்தடுத்து திருப்பங்கள் வியக்கவைப்பவை. மனிதத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படைப்பு என்று இப்படத்தை 'தி டெலிகிராப்' புகழாரம் சூட்டியிருக்கிறது. கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டு, Grand Prix விருதைத் தட்டிச் சென்ற படம்!

****

உட்லண்ட்ஸ் சிம்பொனி

10:30 AM

THE THREE WAY WEDDING (பிரான்ஸ்/ 2010)
இயக்குனர்: Jacques Doillon


ஒரு சுவாரசியாமான நாடக ஆசிரியர். அவரது புதிய நாடகத்தில் நடிக்கும் இருவரில் ஒருவர், அவருடைய முன்னாள் மனைவி. மற்றொருவர், அந்த முன்னாள் மனைவியின் காதலன். இம்மூவரை மையமாகக் கொண்டு நகரும் கதை.

*

12.45 PM

OGUL - THE SON (துருக்கி/2011)
இயக்குனர் : Atilla Cengiz


காதலியைச் சந்திப்பதற்காக, முதல் முறையாக தனது சொந்த ஊரில் இருந்து புறப்படும் 18 வயது இளைஞன் Soner. ஆபத்து, துயரம் என பல திருப்பங்களைத் தரும் பயணம் அது. இரு மகன்களை கதை, இரு தந்தைகளின் கதையாவதே ஹைலைட்.

*
3.15 PM

OTELO BURNING (தென் ஆப்பிரிக்கா/ 2011)


நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலையான காலகட்டத்தில், அப்போதைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைக் காட்டும் படைப்பு. உணர்வுப்பூர்வமான இளைஞர்களின் கதைகளைச் சொல்வதோடு, தென் ஆப்பிரிக்காவின் அன்றைய சமூக - அரசியலை சிறுவர்களின் பார்வையில் காட்டியிருப்பது சிறப்பு.

*****

ஃபிலிம் சேம்பர் -

10 :00 AM

THE WEEPING WILLOW (2005/ ஈரான்)
இயக்குனர் : Masjid Majidi


38 ஆண்டுகளாக பார்வையற்றவராக இருந்த கல்லூரிப் பேராசியருக்கு, சிகிச்சை ஒன்றில் திடீரென பார்வை கிடைக்கிறது. உலகை கண்களால் பார்க்கத் தொடங்கிய பிறகு அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது, இப்படம். சுவாரசியமான கதைக் களம். ஈரானிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருக்கிறது. உலக அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படம்.

*

12.30 PM

THE DISPENSABLES (ஜெர்மெனி/ 2009)
இயக்குனர் : Andreas Arnstedt


வறுமையில் வாடும் குடும்பத்தில் 11 வயது சிறுவன் படும் துயரமே படத்தின் மையம். குடிக்கு அடிமையான அம்மாவோ மனநல காப்பகத்தில். குழந்தைக்கு படிப்பைக் கூட தரமுடியாத அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அப்பா இறந்தது வெளியில் தெரிந்தால், தன்னை குழந்தைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என அந்தச் சிறுவனுக்கு அச்சம். அப்பாவின் மரணத்தை பற்றி வெளியில் தெரியாமல், சடலத்துடன் இரு வாரங்கள் கழிக்கிறான். பிறகு? இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது, திரைக்கதை.

*

3.30 PM

SHADOWS IN PARADISE (பின்லாந்து/ 1986)
இயக்குனர் : Aki Kaurismäki


கதையில் நாயகன், உறவுகள் யாருமில்லாத துப்புறவு தொழிலாளி. சூப்பர் மார்க்கெட்டில் கிளார்க் ஆக இருக்கிறாள், நாயகி. இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால், தங்கள் காதலை இருவருமே மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். அதன் விளைவை உணர்வுப் பூர்மாக சொல்கிறது, இந்த ரொமான்டிக் படம். 1987-ல் சிறந்த படத்துக்கான Jussi Awards வென்றுள்ளது.

*

சத்யம் ஸ்டூடியோ 5

10:00 AM

LENINGRAD COWBOYS GO AMERICA (பின்லாந்து)
இயக்குனர் : Aki Kaurismäki

பின்னிஷ் இசைக் கலைஞர்கள் குழு ஒன்று, உலகப் புகழ் பெறவும், பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா பயணிக்கிறது. சுவாரசியம் திருப்பங்களும் நிறைந்த அந்தப் பயணம் தான் படம். Empire magazine's "The 100 Best Films Of World Cinema" in 2010 பட்டியலில் 88-வது இடத்தில் இடம்பெற்றது, இப்படத்தின் சிறப்புகளுள் ஒன்று!

*
ஐநாக்ஸ் ஸ்க்ரீன் 3

10.00 AM

JOANNA (போலந்து/ 2010)
இயக்குனர் Feliks Falk

போர்ச் சூழல். போருக்குச் சென்ற கணவன் திரும்பவில்லை. அவன் நிலை என்னவென்று தெரியாத இளம் மனைவி, ஒரு யூதச் சிறுமியை காப்பற்ற முயற்சிக்கிறாள். அதற்காக ஜெர்மானிய அதிகாரியை காதலிக்க வேண்டிய கட்டாயம். அரசியல், போர், அவலம்... இத்தகைய பின்புலத்தில் அன்பை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படம்!

*

12.15 PM

AMNESTY (அல்பேனியா/ 2011)
இயக்குனர் : Bujar Alimani

சிறையில் அடைக்கப்பட்ட தனது கணவரை எல்சாவும், தனது மனைவியை ஸ்பெடிமும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி சந்திக்கிறார்கள். அல்பேனியாவின் சட்டவிதிகளின்படி, சிறையில் இருக்கும் தங்களது கணவருடன் மனைவியோ, மனைவியுடன் கணவனோ மாதம் ஒருமுறை உறவாட அனுமதிக்கப்படுவர். தங்கள் இணையைச் சந்திக்க வரும் நாயகியும் நாயகனும் பழகத் தொடங்குகின்றனர். அங்கே உறவு மலர்கிறது. பிறகு..? - அல்பேனிய சட்ட நடைமுறைகள், அங்குள்ள வாழ்க்கை முறை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது!

Saturday, December 03, 2011

ஈழத்தில் ஆட்டிலறி கைப்பற்றி ஆமிக்குத் திருப்பியடித்த புலிகள்!

வரலாற்றின் பாதையில் தமிழர் தம் வீரம் பண்டார வன்னியனின் பின்னர் கரிகாலன் எனும் நாமத்தினூடாகத் தான் உலக அரங்கில் உச்சரிக்கப்பட்டது. புலிகளின் வளர்ச்சி, புலிகளின் திறமைகள், புலிகளின் திட்டமிடல்கள் என அனைத்துமே உலகின் பார்வைக்கும், இலங்கை இராணுவத்தின் பார்வைக்கும் இலகுவில் உய்த்தறிய முடியாத புதிராக இருந்த காலங்கள் அவை. ஓர் இன மானத்தின் அடையாளமாக, வீரத்தின் குறியீடாக விடுதலைப் புலிகள் ஈழத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்று அழியாச் சுடராக மக்கள் மனங்களினுள் வாழ்கின்றார்கள். புலிகளின் பல்லைப் பிடுங்கியதாகவும், புலிகள் பலமிழந்து விட்டதாகவும் உலக அரங்கிலும், இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த மக்கள் மத்தியிலும் சிங்கள அரசு தனது பிரச்சார நடவடிக்கையினை முடுக்கி விட்டிருந்த காலப் பகுதி அது.

1995ம் ஆண்டின் இறுதிக் காலங்களில் யாழ்ப்பாணக் குடா நாட்டினை விட்டுப் புலிகள் முற்று முழுதாக பின்னகர்ந்து, வன்னிப் பகுதியினுள் தமது படையணி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ஒன்றிணைத்து இயங்கத் தொடங்குகின்றார்கள். ஈழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், தமிழ் மக்களுக்கும் பாரிய தலை வலியாகவும், அச்சமூட்டும் ஓர் விடயமாகவும் குண்டு வீச்சு விமானங்களுக்கு அடுத்த நிலையில் இருந்தது தான் இந்த ஆட்டிலறி எனச் சொல்லப்படும் பீரங்கி உந்து கணைச் செலுத்திகளாகும். ஆங்கிலத்தில் Artillery Shell எனவும், தமிழில் பீரங்கி எனவும், வன்னியில் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட தூய செந்தமிழ்ச் சொற்கள் வரிசையில் உந்துகணைச் செலுத்தி, எறிகணைகள் எனவும் சிறப்பிக்கப்படுவது தான் இந்த ஆட்டிலறி ஷெல் ஆகும், போராளிகளால் ஆட்டி எனச் செல்லமாக அழைக்கப்பட்டதும் இது தான்.

புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என உலக அரங்கில் யாழ்ப்பாணக் குடா நாட்டினைச் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கைப்பற்றிய காலப் பகுதியில் லக்ஸமன் கதிர்காமரை வைத்து இலங்கை அரசு புலிகளின் நடவடிக்கையினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரச்சாரப் போரினை முனைப்புடன் மேற் கொண்டிருந்தது. மறு புறத்தில் யாழ்ப்பாண வெற்றியினைத் தொடர்ந்து வன்னிக்குள் காலடி வைத்து புலிகளின் வாலை ஒட்ட நறுக்கி காடுகளுக்குள் வைத்தே புலிகளின் வரலாற்றினை முடிக்கலாம் என ஜெனரல் அனுருத்த ரத்வத்த சூளுரைத்து ( முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மாமன்) வன்னி முற்றுகையினை ஆரம்பித்தது இலங்கை இராணுவம். ஈழ மக்களின் இருப்பிடங்களை நசுக்குவதற்கும் இந்த ஆட்டிலறி எறிகணைகளே பெரும் பங்கு வகித்தன.

குடா நாடு படையினர் வசம் வருவதற்கு முன்னரான ஒவ்வோர் படை நடவடிக்கையின் போதும் மக்கள் ஆட்டிலறி ஷெல்கள் எப்போது யார் மீது எங்கே வந்து வீழும் என ஒவ்வோர் நொடிப் பொழுதும் அஞ்சிப் பயந்து வாழ்ந்தார்கள். வட போர் அரங்கில் பலாலி விமான தரைப் படை கூட்டுத் தலமையகம், காங்கேசன் துறை கடற் படைத் தளம், மயிலிட்டி இராணுவ முகாம் ஆகியவை இந்த ஆட்டிலறி ஷெல்களை மக்கள் குடியிருப்புக்கள் மீது ஏவுவதில் முக்கிய பங்கு வகித்தன. இதே வேளை ஆனையிறவு – பரந்தன் கூட்டுப் படைத் தளமும் (1996 இற்கு முன்பதாக) அந் நாளில் கிளாலி கடல் நீரேரியூடாக வன்னிக்குள்ளும், யாழ்ப்பாணத்திற்குள்ளும் நுழைவோர் மீதும் ஆட்டிலறி தாக்குதல்களை மேற் கொள்ளும் தளங்களாக அமைந்திருந்தன. புலிகள் வசம் ஆட்டிலறிகள் இல்லையே என்னும் குறை புலிகளை விட, அக் காலத்தில் புலிகளை நேசித்த மக்கள் மனங்களைத் தான் வாட்டிக் கொண்டிருந்தது.

வெளி நாட்டில் ஆட்டிலறியினை வாங்கி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வருமளவிற்கு புலிகள் ஆட்டிலறி தொடர்பில் ஈடுபாடு காட்டவும் இல்லை. ஆட்டிலறியினை கடல் வழிப் பயணத்தினூடாக வெளி நாட்டின் கறுப்புச் சந்தையில் வாங்கி புலிகள் பகுதிக்குள் கொண்டு வருவதற்குரிய சாத்தியக் கூறுகள் அக் காலத்தில் புலிகளுக்கு இருந்தாலும்; அதற்கு வேண்டிய ஷெல்களைத் தயாரிப்பதென்பது அப்போது புலிகளுக்குச் சிரமானதாகவே இருந்தது. புலிகள் தமது சொந்தத் தயாரிப்பாக கடுமையான முயற்சிகளின்பின்னர் பசிலன் 2000 எனும் மோட்டால் ஷெல்லினை 1990 களில் கண்டு பிடித்தார்கள். யாழ்ப்பாணம் கோட்டைச் சமரின் போது குறுந் தூர வீச்செல்லை கொண்ட இந்த மோட்டார் ஷெல்லினைப் புலிகள் பரீட்சித்துப் பார்த்து வெற்றியும் கண்டார்கள். ஆனால் இந்தப் பசிலன் ஆயுதமானது ஸ்ரீலங்கா இராணுவத்தின் வசமிருந்த 88mm, 121mm, 131 Or 132mm ஆட்டிலறிகளின் முன் தூசாகவே இருந்தது.

இலங்கை இராணுவத்தின் வசம் நீண்ட தூர ஆட்டிலறிகள் இருக்கையில் புலிகள் பசிலன் 2000 இற்கு வேண்டிய வளங்களை உருவாக்குவதற்கே கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தில் தென்மராட்சியில் கச்சாய் – கொடிகாமம் வீதியில் அமைந்துள்ள முகாம் ஒன்று யாழ்ப்பாணக் குடா நாட்டின் வீழ்ச்சிக்கு முன்பதாக புலிகளின் மோட்டார் ஷெல்களுக்கு வேண்டிய வெடி மருந்துகளைத் தயாரிக்கும் மையமாகச் செயற்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் ஒவ்வோர் படையெடுப்பின் போதும் இலங்கை இராணுவம் தனது முன்னேற்றத்தினை அறிவிக்கும் முகமாக ஆட்டிலறிகளை ஏவிக் கொண்டிருந்தது. மழை போன்று கண் மூடித் தனமாக இலங்கை இராணுவம் வெளி நாடுகளிடமிருந்து பெற்ற ஷெல்களை ஏவிக் கொண்டிருக்கையில் எதிர் சமர் புரிந்து முன்னேறி வரும் படையினரை விரட்டி அடிப்பதென்பது புலிகளுக்கு அப்போது சவாலனா விடயமாகவே இருந்தது.

மக்கள் மனங்களில் இந்த ஆட்டிலறிகள் புலிகள் வசம் வந்தால் அப்போது பலாலி கூட்டுப் படைத் தளம் மீது புலிகள் தாக்குதல் நடாத்த வசதியாக இருக்குமே எனும் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணக் குடா நாட்டின் வீழ்ச்சி வரை புலிகள் வசம் அந்த ஆட்டிலறிகள் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. புலிகள் கைகளுக்குப் பீரங்கிகள் எவ்வாறு கிடைத்தது? புலிகள் பீரங்கிகளை எப்படிக் கைப்பற்றினார்கள்?

இது தொடர்பில் அறிய ஆவலா? அடுத்த பாகம் வரை காத்திருங்கள்! எதிர் பார்த்திருங்கள்!

நன்றி: நாற்று வலைப்

Friday, September 02, 2011

எனது பள்ளிகூட ஆசிரியர் திரு. தெய்வசிகாமணி அவர்களின் கானல் காடு பற்றி....

கானல்காடு ஒரு புதிய நவீனம்

கானல்காடு
நாவல்
கோ.தெய்வசிகாமணி
நடவு வெளியீடு
269,காமராஜ் நகர்,

ஆலடி சாலை,

விருத்தாசலம், 606001

போன்; 9789635570

விலை ரூ.300/-



தண்ணீரே ஓடாத, ஒரு ஆற்றின் குறுக்கே, மிகப்பெரிய நீண்ட பாலத்தையும், சாலையில் எப்போதும் புழுதியுமாக இருக்கும் விருத்தாச்சலம் என்ற ஒரு சிறிய நகரில் - அந்த ஊரின் பெரும்பான்மை மனிதர்களைப்போல கறுத்த தோல்நிறம் கொண்டு, மிக குள்ளமான நசுங்கிய தோற்றம் கொண்ட, கோ.தெய்வசிகாமணி, தமிழுக்கு, ஒரு புதுவகையான நவீனத்தை தந்திருக்கிறார்.

1884ல் பிறந்து 1924ல் படுகொலை செய்யப்பட்ட ஆறுமுக நாட்டார் என்ற ஒரு சாமான்ய மனிதனின் கதையை, அந்த மனிதன் வாழ்ந்து மறைந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆறுமுகநாட்டார் சுற்றி அலைந்த ஆறு மாவட்டங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, பலமைல் தூரம் பயணித்து, பல நூறு முதியவர்களை, ஆறுமுக நாட்டாரின் மூன்று தலைமுறை வாரிசுகளை நேரில் சந்தித்து, அவரைப் பற்றி கேட்டறிந்து, அவற்றையெல்லாம் ஒலிநாடாவில் பதிவு செய்து, அரசாங்க ஆவணங்களில் ஆறுமுக நாட்டாரைப் பற்றி காணக்கிடைத்த செய்திகளையும் ஒன்றினைத்து, செவி வழி செய்திகளையும், கிடைத்த ஆவணக்குறிப்புகளையும் வைத்து கானல்காடு என்ற பெயரில், அவரின் கதையை, அவர் வாழ்ந்த வாழ்க்கையை, யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, மிக யதார்த்தமாக, இயல்பாக, நிகழ்ச்சிகளாக்கி, இரத்தமும் சதையுமாய், ஒரு நவீனத்தை உருவாக்கி தந்திருக்கிறார்.

தமிழுக்கு இது புதுசு.

நம்முடைய வரலாற்று நவீனங்கள், பல குப்பையானவை சிறுகை வடிவத்தில் கூட, தமிழில், உலகதரத்தோடு போட்டி போட முடிந்திருக்கிறது. ஆனால் நவீனம் என்ற இலக்கிய வகையில், நம்முடைய சாதனை, மிக உன்னதமானவை என்று நம்மால் சொல்லிக் கொள்ள முடியாது. இதற்கான காரணிகள் பலவாக இருக்கலாம்.

1879ல் எழுதப்பட்ட தமிழின் முதல் நவீனம் என்று சொல்லப்படுகிற பிரதாப முதலியார் சரித்திரம் முதலாக, கடந்த 120 ஆண்டுகளில் வெளிவந்த எத்தனை தமிழ் நவீனங்களை, நம்மால் இன்றைக்கும் கொண்டாட முடியும் என்று, இலக்கிய வாசகர்கள் அனைவரும், அவரவர் மனநிலைக்கேற்ப, வாசகத்தன்மைக்கேற்ப, ஒரு பட்டியல் போட்டுப் பார்த்தால், இதன் நிதர்சனம் நமக்கு தெரியவரும்.

சண்முக சுந்தரம் 1940களில், நவீனம் படைப்பதை ஒரு கலையாக மாற்ற முயற்சித்து, எழுதி நாகம்மாளை இப்போது நினைத்துப் பார்க்கலாம். அதற்குப் பிறகு, ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தமிழில் வெளிவந்த, நவீனங்களை, பரிசீலனைக்கு உள்ளாக்கி, சிலவற்றை தெரிவு செய்ய நமக்கு வாய்ப்புண்டு. நவீனத்தைப் பொறுத்தவரை, தமிழின் இலக்கிய வரலாற்றில், கடந்த 120 ஆண்டுகளில், ஒரு பத்து நவீனத்தை நாம் தெரிந்தெடுத்தால், கானல்காடு அந்த பத்தில் ஒன்றாய் இருக்கும்.

1880களில் கடலூரை மையமாக கொண்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளாக, தற்போது ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிற, அந்த நிலப்பகுதிகளில், 1924 வரை - ஒரு நாற்பதாண்டுகளில், - அந்தப் பகுதிகளில் வாழ்ந்த எல்லா இன மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்நிலைகள் பற்றியும், அவர்களுடைய அப்போதைய வாழ்க்கை மதிப்பீடுகளைப் பற்றியும், குரூரங்களைப் பற்றியும், நிலஉடமையும், சாதியமும் தோற்றுவித்த ஆண்டான் அடிமை வாழ்நிலை சிக்கல்களையும், கானல்காட்டில் விவரித்ததைப் போல, வேறு எங்கும், ஒரு கலைவடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.

அப்போது வாழ்ந்திருந்த அந்த மனதிர்களின் மனவோட்டத்தை, அதன் சிதறல்களை, இவ்வளவு சிறப்பாக உரையாடல் வடிவத்தில், கதை சொல்லும் வடிவத்தில், காட்சிகளாக்கியும் மிக நேர்த்தியான ஒரு நெசவு சாத்தியமா என்று திகைப்பாயிருக்கிறது. பேராசிரியர் பழமலை, ஒரு வாய்ப்பேச்சில் குறிப்பிட்டதைப்போல, இனி ஆறுமுக நாட்டாரின் வரலாறென்றால், அது கானல் காட்டில் தெய்வசிகாமணி எழுதிய வரலாறுதான், என்ற முடிவுக்கு நம்மை நகர்த்தும் புதினம் இது. பாஸ்கரன் எளிமையாகவும் ஆழமாகவும் குறிப்பிட்ட மாதிரி, "ஆங்கிலேயன் ஆறுமுக நாட்டாரை, சிறை வைத்தான். கோ.தெய்வசிகாமணி, 80 ஆண்டுகள் கழித்து, கானல் காட்டின் மூலமாக ஆறுமுக நாட்டாரை விடுவித்திருக்கிறார்.

ஆங்கிலேயன் அவரை படுகொலை செய்தான்,
கோ.தெய்வசிகாமணி, கானல்காடு நவீனம் மூலமாக,
ஆறுமுக நாட்டாரை உயிர்ப்பித்திருக்கிறார்.''
என்ற அளவோடு, இந்த நவீனத்தின் சிறப்பு முடிவதில்லை.

செம்மொழி ராமசாமி, இந்த நூலின் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல, இந்த புதினத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வழக்காற்று சொற்கள், இதுவரை எந்த அகராதியிலும் இடம் பெறாதவை.

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் பிறந்து, ஆறுமுக நாட்டார் படுகொலை செய்யப்பட்ட அதே 1924ம் ஆண்டு மறைந்த ஜெர்மானிய எழுத்தாளன் காஃப்காவின் "விசாரணை'' என்ற புதினத்தின், நினைவுகளை கானல்காடு எனக்குள் தோற்றுவித்தது என்று தமிழ்நாடன் குறிப்பிடுகிறார்.


இந்த புதினத்தில் சொல்லப்படுகிற, உணவு வகைகள், பழக்கவழக்கங்கள் கலாச்சார பிண்ணனி ஆகிய பலவற்றை, ஒரு புனைதலில் தெய்வசிகாமணி புணர்நிர்மானம் செய்திருக்கும் செய்நேர்த்தி இன்னுமொரு அழகு.

உலக புதின வரலாற்றில், சரித்திரத்தை இலக்கியமாக்குகிற செய்நேர்த்தியின் உச்சம், நார்வே நாட்டைச் சேர்ந்த ஸீக்ரிட் யூண்ட்ùஸட் என்ற நாவலாசிரியையிடம் அபரிமிதமாக இருந்தது. 1929ல் அந்த நாவலசிரியைக்கு நோபல்பரிசு கொடுத்த போது, அந்த நவீனத்தை படித்த, வாசகர்களுக்கும் விமரிச்சர்களுக்கு இது குறித்து ஒருமித்த அபிப்பிராயம் இருந்தது.


வரலாற்றை புதினமாக்குகிற போது, அந்த புதினத்தின் வாசிப்பு ஈர்ப்புத் தன்மையை நிலை நிறுத்திக் கொள்வது. புதினத்தில் ஒரு சவாலான தன்மை கொண்டது. அதை கானல் காட்டின் ஆசிரியர், தன்னுடைய லாகவமான ஆற்றொழுக்கான நடையின் மூலமாக, சாத்தியமாக்கியிருக்கிறார் என்று சொல்லலாம்.


கதைத்தலைவன் சென்ற நூற்றாண்டில் உயிரோடும் உணர்வோடும் இந்த மண்ணில் உலவிய ஒரு மனிதர். அவரின் பலங்களையும், பலவீனங்களையும், ஒரு சார்பின்றி, துல்லியமாக பதியவைக்கிற முயற்சியில் ஆசிரியருக்கு வெற்றிதான்.

கதைத்தலைவன், ஒரு ஒளிவட்டத்திற்குள் அடைக்கிற முயற்சியில் இவர் ஈடுபடவில்லை. அதையும் மீறி, தலைமறைவு வாழ்க்கையில், ஓடி, ஓடி, பதுங்கி, பதுங்கி வாழ்ந்த இந்த மனிதனை நமக்கு நேசிக்க தோன்றுகிறது. சாதிவித்தியாசம் பாராமல், அந்த தலைமறைவு வாழ்க்கையில், எல்லா சாதியினரும் ஆறுமுக நாட்டாருக்கு உதவுவதும், ஆறுமுக நாட்டாரும் மனிதநேய விகசிப்போடு எல்லோருக்கும் உதவியாய் இருப்பதும், மிக இயல்பாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சாதிக்காரணை சாதிக்காரனே காட்டிக் கொடுக்கும் தொடர் வரலாற்றுப் பிழையில், ஆறுமுகநாட்டாரும் சிக்கிக் கொள்வது, எந்த காலத்திலும் மாறாத வரலாற்று போக்கை நமக்கு உணர்த்துகிறது.

இந்த நூலின் அறிமுக விழாவில், கொடுக்கூர் ஆறுமுக நாட்டாரை போற்றும் வகையில் உணர்வு பொங்க கொடுக்கூரிலிருந்து சென்னை பெருநகரத்திற்கு பேருந்து பிடித்து வந்து, கோயில் பூசாரி முதல் பஞ்சாயத்து தலைவர் வரை, திரளாக கலந்து கொண்ட அந்த கொடுக்கூர் கிராமத்து மக்களைப் பார்க்கிற போது, ஆறுமுக நாட்டார், 80 ஆண்டுகள் கழிந்த நிலையிலும், அவர்கள் மனதில் எத்தனை ஆழமாக உணர்வு பூர்வமாக கலந்து இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை நேரிலேயே பார்க்க முடிந்தது.

இந்த புதினத்தில் அடிவானம் கூட செம்மண் நிறமாய்த்தான் ஆசிரியருக்கு தோன்றுகிறது.
இனி, இந்த புதினத்தில் நான் முயங்கிய சில இலக்கிய வரிகள்.

"ஊரில் பலபேரிடம் நெருப்பு மூட்டும் வளர்ப்பு அஞ்சலை என்ற பெண் பாத்திரத்தின் வர்ணிப்பு''

"ஆடுமாடு மேய்க்கிறதுங்க ஆவாரந்தழையை ஒடிச்சு
போட்டு தெளிஞ்ச தண்ணீயை குடிக்கும்''

"அரிசி கடன் கொடுத்தாலும் கொடுப்பா, ஆம்பிடையானை
கடன் கொடுப்பாங்களா''

மாவட்ட கண்காணிப்பாளர், குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட
ஆறுமுக நாட்டாரைப் பற்றி, நினைக்கிற பொழுதில்:

"இவன் குற்றம் செய்திருக்க முடியாது. நாம் சட்டத்தின் கண்கள் கொண்டுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. நியாயத்தின் பக்கம் நிற்க முடியாமல் செய்துவிடுகிறது.''

சட்டத்தின் கண்களும் நியாயத்தில் கண்களும் வெவ்வேறானதா என்ற நிரந்தரக் கேள்வி அப்போதும் இப்போதும் இருப்பதை மேலேகண்ட வரிகளில், வாசகர்களை உணர வைக்கிறார்.

"மரங்களை கைகழுவி காணாமல் போகும் சருகுகள்''

"அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் சுமந்தாகணும்
இது நாட்டான்நீதி, விதுரநீதி அது தான். சூத்திர நீதி''

"அதிகாரத்துக்கு கட்டுப்படுறவன், எதிர்த்து நிக்காதவன்
எல்லோரும் திருடன்தான்''

"அவன் நினைவு வரும் போதெல்லாம், ஊவாமுள்ளாய்
நெருடச் செய்கிறது.''

"போதையில் தான் சாதிவந்து முன்னிற்கும்
அப்புறம் அடிதடியிலே வந்து நிக்கும்.''

"அய்யனார் கோயில் முன் வைத்திருந்த
மண்குதிரைகள் திடுமென உயிர்பெற்று
தங்களை குறிவைத்து ஓடிவரும் காட்சியும்,
இவர்களை குளம்படியில் கூழாக்கி
விரையும் காட்சியும் நிழலாடின''

"ஓடையவன் பார்க்காத வாழை
ஒரு முழம் கட்டைம்பாங்களே''

"தவறிப்போன ஆடு மாதிரி கத்தற சத்தம்''

"பொழைக்க வழியில் லேன்னா, எல்லா வழியும்
நல்ல வழிதான். தப்பு, சரிங்கிறதெல்லாம்
வயிறு நெறைஞ்சவனுக்குத் தான் நமக்கில்லே''

"கல்லாந்தரிசிலே ஒழைச்சு ஓடாத் தேயுறாங்க
மண் வயித்துக்கு வஞ்சனை தான் செய்யுது.''

"என் ஏட்டை எமன் பார்க்கமறந்துட்டானே''

"பேச்சின் தர்க்கம் பல்வேறு புதிர்களுக்குள்
நெட்டித்தள்ளியது. பாசிகுளம் வழியாக
வெள்ளாற்றில் இறங்கும்போது, வழிதவறிவிடும்.
வெள்ளநீர் அரித்து அரித்து, செம்மண்கரைந்து
பலகால்களாக பிரிந்து இறங்கினால் சுற்றிச்சுற்றிச்செல்ல
இறங்கியவழியும் வெளியேறும் வழியும் மறந்துவிடும்.''

"நாளை என்பது யமன் கணக்கு''
"நகமும் சதையும் போல இருந்தாங்க
நகமே சதையை பதம்பார்த்துன்னா,
சதையழுகினா நகத்துக்கும் கேடு''

"கீரியும் பெருச்சாளியும் வளையிலிருந்து
புறப்படும் நேரம்.''

"மணலை கயிறா எப்படி திரிக்க முடியும்?
வாய்க்காலிலே கெடக்குதில்லே நீர்முதுள்ளிச்செடி.
அதோட வெதைகளை மணலோடு சேர்த்து
தண்ணீர் ஊத்தி பக்குவமா பெசைஞ்சா
மணல் நாம, விரும்புற வடிவத்துக்கு வருது''.

கொள்ளிடம் பெரிய ஆறு. ஒவ்வொரு நதிக்கும்
"பின்னால் உள்ள சங்கீதமும் பயங்கரமும் இதற்குமுண்டு
யாருக்கும் அடங்காத கிடாரி போல ஓடிக்கொண்டிருக்கும்.''

"காலம் வாழ்க்கையை வைத்து சதுரங்கம் ஆடுகிறது.''

"எடக்கன் புள்ள பெத்தவளுக்கு தலைச்சன்
புள்ளக்காரி மருத்துவம் சொல்ற மாதிரி யிருக்குதா?''

"இதுசரி இது தப்புங்கிறதெல்லாம் இன்னொரு
கால மாற்றத்திலே அர்த்தமில்லாம போயிடுது.''

"நம்ம அப்பன், பாட்டன், பூட்டன் எல்லாரையும்
மறந்துட்டோம். வம்சக்கொடியை மூணு
தலைமுறைக்கு மேல நம்மால சொல்லமுடியலே
வேர் இத்துப்போன கொடி மரத்திலே படர்ந்திருந்தாலும்
காஞ்ச சருகாத்தான் உதிரும்.''

"உலகம் உயிர்த்தத்துவத்தின் அழகிய உலைக்களம்.
இவை யொன்றை யொன்று இரையாக்கியே வளரவும் வாழவும் செய்யும்.''

"காரிருளில் நிர்வாணமாய் பறந்த பறவையின் கால்தடத்தை
காற்றில் தேடினாலா கிடைக்கும்?''

"நதியின் போக்கில் ஏதுமறியாது உருண்டோடி
மழுங்கிக்கரையும், கூழாங்கல் என நிசப்தமாய்
கரையும் காலம்''

"ஏகலைவன் மண்பொம்மையிடம் தானே கற்றான்?
மண்ணுக்குள் புதைந்தபோன ஏதோ ஒரு
மண்பொம்மையின் நிழல் தானோ நாம்''

இந்த புதினம் உரைநடையில் ஒரு காவியம். இதன் காவிய அழகையெல்லாம், இவ்வளவு குறைவான வார்த்தைகளில் விவரிக்க இயலாது. பாரதம் வருகிறது. கண்ணகி கதைக்கு புதிய அர்த்தம் தோண்டி எடுக்கப்படுகிறது. பாஞ்சாலியின் சீற்றமும், கனலும் அனலாய் தெறித்து, மிக நீண்ட உவமைகளாகிறது. துர்ச்சொப்பன விவரிப்பு, பக்கம் பக்கமாய், நாகமாய், வளைந்து நெளிந்து சீறுகிறது. கும்மிருட்டில் அம்மணம் மறைவதும் புதினக்கவிதையாகிறது.

ஆறுமுக நாட்டாரின் வாழ்வின் அடர்த்திக்குள் நுழைந்து, வாழ்வையும், நம்மையும், இந்த புதினத்தில் தரிசிக்க வைக்கிறார் ஆசிரியர்.

வாழ்வின் யதார்த்திலிருந்து படைப்பின் யதார்த்தத்தை உருவாக்க முனைந்து வெற்றி கண்டிருக்கிறார் தெய்வசிகாமணி.

அவரே என்னுரையில் சொல்லியதைப்போல, ஆறு மாவட்டங்களில் அறுநூறுக்கு மேற்பட்ட கிராமங்கள் ஆயிரகணக்கான மனிதர்களின் பேச்சு எழுத்தாக உருவாகி, கானல் காடு என்ற உரைநடை காவியப்புதினமாருக்கிறது.

இந்தக்காவியத்தின் தொண்ணூறு விழுக்காடு பாத்திரங்கள் உண்மையானவை. நாலைந்து பாத்திரங்கள் மாத்திரமே கற்பனையானவை. தமிழ்ப் புதின வரலாற்றில் கானல் காடு ஒரு மைல் கல். புதினத்திற்கான புதிய இலக்கணங்களை படைத்து காவியமாய் உருக்கொண்டிருக்கிறது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஒரு தமிழ்ப்புதினம்.


எஸ்.சுவாமிநாதன்



நன்றி : வடக்கு வாசல்

Sunday, January 09, 2011

செருப்பைக்காட்டிய கமலுக்கு


























செருப்பைக்காட்டிய கமலுக்கு எதிப்பைக்காட்டும் அறிவுமதி


"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு...

30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு...
இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..
கமல் படம்.
மன்மதன் அம்பு.
மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு
வந்து விட்@டா@மா
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!


அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்
இந்த
அம்பு...
இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை
உணர்ந்து திருந்துதல் நல்லது.

கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால்
முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.

இந்த மன்மத அம்புவின்
வாயிலாக...
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை
இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி
செய்திருக்கிறார்.

"தமிழ் சாகுமாம்...
தமிழ் தெருப் பொறுக்குமாம்.'

வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்து...
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று...
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..
பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் @பால...
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து..

இறுதியில்
அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!
அது என்ன ஆத்திரம்!

போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்!

அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.
அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!

தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க

வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!
இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூட... நீங்கள்
பெரிய்ய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே!

அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்!

ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!

இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!

ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்...
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!

பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்...
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும்.

ஆனால்
"அவன் தமிழ்
சாக வேவண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்.''

தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!

தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை..
நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்..

"யாதும் ஊரே யாவரும்
கேளிர்' என்று
உலகையே பெருக்கியவர்கள்
உங்கள்.
எங்களைப் பார்த்து
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..
உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்...!
கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்...
இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன.

மோந்து பாருங்கள்.
எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
உங்கள்
படத்தில் வருகிற கைபேசியின் மேல்
வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும்.

கமல்..
நகைச் சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!
ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!
இதில் வேறு... வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!

அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.
இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம்.

சீதையைப் பார்த்து
"உயிரே போகுதே'
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
"உயிரே போகுதே'
பாடுவோம்.
ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!
எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!

அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.

அதற்கு
வருவான்
வருவான்
வருவான்
"தலைவன்
வருவான்!'
இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.

நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!

நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வேவண்டாமா?

அன்புடன்
அறிவுமதி

நன்றி; அறிவுமதி

Wednesday, June 16, 2010

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்





இரத்தின புகழேந்தி


நான் பள்ளிக்கூட நாட்களில் கவிதை புத்தகம் ஏதாவது இருந்தால் தாருங்கள் என கேட்க ,அறிவுமதியின் "ஆயுளின் அந்திவரை"யை எனக்கு கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டவர் , அந்த புத்தகத்தை படித்துவிட்டு நானும் கவிதை எழுத ஆரம்பித்த அந்த நாள்,
எங்க அப்பாவிடம் அடிவாங்கிய நாள் தான் நான் எழுத வேண்டும், சினிமா துறைக்கு போகவேண்டும், என்று கங்கணம் கட்டிக்கொண்ட நாள்......

பிறகு இவரின் "மண்கவுச்சி" தான் என் திரைக்கதைக்கான முதல் களம், தொடர்ந்து இவருடைய அனைத்து படைப்புகளும் எனது காட்சி அமைப்புகளுக்கு உறுதுணையாக இன்றுவரை இருக்கிறது..நான் பணியாற்றிய பல இயக்குனர்களுக்கு இவரும்,கண்மணியும் அறிமுகமில்லாத நண்பர்கள்..

இவரின் அன்பும், வாழ்த்துகளும் எனக்கு பெரிய ஒத்தாசை...முல்லை நில சிறுவர்கள் விளையாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தளார்,எங்கள் ஊர் படைப்பாளிகளில் அறிவுமதியின் முதல் செல்லபிள்ளை படைப்பாளர் இவர்தான்......
பள்ளிஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கிராம அடையாளங்களை தொலைக்காமல் இருக்கவேண்டும் என்ற ஈடுப்பாட்டுடன் இருக்கும் இவரின் படைப்புகள் எல்லாமே தமிழில் மிக முக்கியாமான படைப்புகள் ஆகும்.,


இவரின் படைப்புகள்
1.மண்கவுச்சி
2.நகர்குருவி
3.கிராமத்து விளையாட்டுகள்,
4.தமிழக உணவு முறைகள்,
5.மரபுவழி அறிவுமுறை,
6.வன்னிய சாதிப்பிள்ளைகள்

Saturday, June 12, 2010

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்














சு.தமிழ்ச்செல்வி
1995_96-ம் வருடம், விருத்தாசலத்தில் செராமிக் தொழில் நுட்பக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில். அண்ணன் கரிகாலனோடு பழகிய ஒரு மாலையில் வீட்டிற்கு அழைத்து சென்று அண்ணி சு.தமிழ்செல்வி,குழந்தைகளாக இருந்த சிந்து,சுடரை அறிமுகப்படுத்த, நானும் அவர்கள் வீட்டில் ஒருவனானேன். தினமும், மாலை வீட்டு வாசலில் கொட்டிகிடந்த மணலில் உட்கார்ந்து ஊர்கதை, உலககதையோடு உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்துவார், அப்போது அண்ணி அவர்கள் எழுதிகொண்டிருந்த "அளம், மாணிக்கம்," கையெழுத்து பிரதியாக எடுத்துவந்து படிக்க கொடுத்த போது, முதல் வாசகனானேன், படித்து முடித்ததும் "நேரமே கிடைக்கலைங்க-ம்பி",- அண்ணன் ஆசைக்கு, ஒரு தொகுப்பாவாவது இந்த வருஷம் கொண்டுட்டு வந்துடணும், என்று சொல்லும்போதே தெரியும் பின்னாளில் மிக பெரிய சாதனைகளை செய்ய தயாரகிறார்கள் என்று..
இன்று உலகம் முழுக்க தனக்கென்று வாசகர்களை ,அடுத்த படைப்பு என்ன என்று எதிர்பார்க்க வைத்திருக்கும் மிக முக்கியமான எழுத்தாளர்.

இவரது படைப்புகள்
1.அளம்
2. மாணிக்கம்
3.கீதாரி
4.கற்றாழை
5.ஆறுகாட்டுதுறை
6.சாமுண்டி
7.கண்ணகி

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்










த.பழமலய்

தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படும்பொழுது அதிலே கவிஞர் த.பழமலய்க்கும் நிச்சயமான ஓர் இடம் உண்டு.
கவிஞர் பழமலாய் மக்கள் இயக்கத்திலே இணைந்து மனித நேசிப்பினை உள்வாங்கிக் கொண்டார். கிராமிய மண்ணிலே வேர் கொண்ட எளிமையை ஆட்சிப்படுத்தினார். சாதாரண மக்கள் வாழ்க்கையில் ஏற்படும், சட்டென்று கண்களுக்குப் புலனாகாத, சிறு சிறு சலனங்கள் கூட கவிதைகளுக்கான உயிர்ப் பொருளாகப் பழமலய் வசப்படுத்தினார்.

["எதுவும் பெரிய மசுரு இல்லை நிறைய எழுதுங்கடா"ன்னு எங்களுக்கு துணிச்சல் கொடுத்தவர், "சினிமா அப்ப ரொம்ப கஷ்டம் இப்ப எப்பிடி?" என்று தெரியாத மாதிரி கேட்பார், "அறிவுமதி, தங்கர்ல்லாம் இருக்காங்க இல்ல போங்க போங்க" என்று சொன்னவர்]

இவரின் படைப்புகள்
1.சனங்களின் கதை, 1996
2.குரோட்டன்களோடு கொஞ்ச நேரம், 1991
3.இவர்கள் வாழ்ந்தது, 1994
4.இன்றும் என்றும், 1998
5.முன் நிலவுக்காலம், 1999
6.புறநகர் வீடு, 2000
7.இரவுகள் அழகு, 2001
8.வேறு ஒரு சூரியன், 2002
9.அண்ணன் குப்புசாமி இன்னும் ஆழமானவர்-வாழ்க்கைக் குறிப்புகள், 1978
10.நரபலி:தெய்வங்கள்,திருவிழாக்கள், 2002
11.திருக்குறளார் வீ.முனிசாமி வாழ்வும் பணியும், 2003
12.பாம்புகள் சிறுகதைகள், 2003
13.தெரியாத உலகம், 2004
14.தருமபுரி(தகடூர் நாட்டுத் தகடூர்) மண்ணும் மக்களும், 2005

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்





அறிவுமதி,


புகழ் பெற்ற தமிழ் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் ‘மதியழகன்’. தனது நண்பர் ‘அறிவழகன்’ பெயரையும், தனது பெயரையும் சேர்த்து ‘அறிவுமதி’ என்று வைத்துக்கொண்டார்.
திரைப்படதுறையில் என்னை போல வாய்ப்பு தேடும் பலருக்கு வழிகாட்டி.........
இன்று நான் 10க்கும் மேற்ப்பட்ட திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்ததற்கு காரணமாக இருந்தவர்.,
இவரின் படைப்புகள்;
1.நிரந்தரமனிதர்கள்,
2.புல்லின் நுனியில் பனிதுளி ,
3.அனு திமிர் அடக்கு
4.என் அன்பான ராட்சசிக்கு,
5.ஆயுளின் அந்தி வரை
6.கடைசி மழைதுளி
7.நட்புகாலம்
8.வெள்ளைத்தீ
9.வலி

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்

கவிஞர் கரிகாலன்

எல்லோருக்கும் காணக்கிடைக்கும் சராசரிக் காட்சிகளிலிருந்துகூட கவிஞன் சில கண்டறிதல்களை அடைகிறான்.அந்த மாற்றுக் கோணத்தை, சிந்தனையை கற்பனையும், கவித்துவமும் கலந்து தருகிறான். கவிஞர் கரிகாலன் தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவர். அதிகாரத்தின் முன் கட்டுப்படவேண்டிய நிர்ப்பந்தம், வஞ்சிக்கப்படும் எளிய மனிதர்களுக்கான அக்கறை, அரசியல், காமம், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, பகடி, அலாதியான கற்பனை, காட்சிகளை முன்வைத்துவிட்டு ஒதுங்கி நின்றுகொள்ளுதல், தொன்மையையும் நவீனத்தையும் இணைத்து ஒரு மாயக்காலத்தை உருவாக்குதல் , சிதையும் தொன்மம் பற்றிய கவலை, குழந்தைகள் உலகம் என இவரின் கவிதைகளின் தன்மைகள் பலதரப்பட்டது. 90 களுக்குப் பின் நவீன தமிழ்க்கவிதையின் போக்குகள் என்கிற இவரின் திறனாய்வுக் கட்டுரைகள் கொண்ட நூல் இவரின், திறனாய்வு ஆளுமையை நன்கு வெளிப்படுத்தும் சிறந்தவொரு நூல்.கவிதைகளோடு நின்றுவிடாமல் திறனாய்வு, கட்டுரைகள், நாவல் எழுதுவது, சமூக நலன் சார்ந்த செயல்களில் ஈடுபாடு என இயங்குகிறார்.மேலும் களம் புதிது என்கிற சிற்றிதழ் நடத்தியிருக்கிறார். தற்போது மீண்டும் இதழைத் தொடர இருப்பதாக அறிய நேர்ந்தது. தொன்னூறுகளிலிருந்து இலக்கியவெளியில் இயங்கிவரும் கரிகாலன் 1965ல் கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்தவர்.ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணுபுரிகிறார். இவரது கவிதைகளில் சில ஆங்கிலம், இந்தி, வங்காளம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.புனைவிலக்கியத்திற்காக கதா விருதும், கவிதைக்காக ஏலாதி இலக்கிய விருதும் பெற்றுள்ளார். இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி தமிழின் முன்னணிப் புதின எழுத்தாளர்களுள் ஒருவர்.இவரது தம்பி இரத்தின.புகழேந்தி அவர்களும் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் எனும் 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பு உயிர் எழுத்து வெளியீடாக வந்துள்ளது. அதன் பின்னைட்டையில் காணப்படும் வரிகளே, இவரைப் பற்றின செறிவான, ஆழ்ந்த திறனாய்வுக்கு சான்றாக அமைந்துள்ளது. அது பின்வருமாறு ‘ தொன்னுறுகளில் உருவான தனித்துவம் மிக்க கவி ஆளுமைகளுள் ஒருவரான கரிகாலனின் கவிதைகள் அதிகார எதிர்ப்பை மையச் சரடாகக் கொண்டவை.தொன்மமும், புனைவும், மர்மமும் மிகுந்த இவரது கவிதைகள் தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியும், மேலைத்தேயக் கவிதைகளின் புதுமையும் இணையப் பெற்றவை.ஐவகை நில அடையாளங்கள் திரிந்து உருவாகிக்கொண்டிருக்கும் ஆறாவது நிலத்தையும், அபத்தங்களின் கூட்டிசையாக மலர்ந்திருக்கும் நம் நலவாழ்வையும் கேலிசெய்யும் இத்தொகுப்பு இதுவரை வெளிவந்துள்ள அவரது தொகுப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நூறு கவிதைகளை உள்ளடக்கியிருக்கிறது


' இவரின் படைப்புகளாவன'

1.புகைப்படமனிதர்கள்
2.அப்போதிருந்த இடைவெளியில்- கவிதைகள்
3.புலன்வேட்டை- கவிதைகள்
4.தேவதூதர்களின் காலடிச்சத்தம்- கவிதைகள்
5.இழப்பில் அறிவது- கவிதைகள்
6.ஆறாவது நிலம்- கவிதைகள்
7.அபத்தங்களின் சிம்பொனி- கவிதைகள்
8.கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்
9.நவீனத்தமிழ்க் கவிதையின் போக்குகள்- கவிதைத் திறனாய்வுக் கட்டுரைகள்
10. நிலாவை வரைபவன் - நாவல்

நன்றி; தடாகம், ச.முத்துவேல்

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்


















கண்மணிகுணசேகரன்


முதல் பிரசுரம்
ஒவ்வொரு வெளியீடும் முதல் பிரசுரம் கண்மணி குணசேகரன்
படையை ஆட்சி செய்த பெருஞ்சமூகம் என தெருக்கூத்து பாடல்களில் பிளந்து கட்டினாலும், முட்டிவரை நீண்டு தொங்கும் அவரின் ஒட்டுக்கோவணம் போலவே நெட்டெழுத்துக்களால் ஆனது, அப்பாவின் கையெழுத்து. கையை ஊன்றி கரணம் போடும் எங்களது குடும்பத்தில் நானும் என் அண்ணனும் மட்டுமே முதல் தலைமுறை படிப்பாளிகள். எழுத்து, இலக்கியம் என்கிற வகையில் பங்காளி, ஒறம்பரை, தாய்மாமன் என எட்டின வரைக்குமான எங்களின் நெடிய வகையறாக்களில் நான் மட்டும் முதல் படைப்பாளி. செம்மண்ணில் கால் பாய்ச்சி, கிளை நீட்டி விரிந்திருக்கும் இந்த முந்திரிக்காட்டு இலக்கியத்தில் தங்கர்பச்சானை அடுத்து வந்தவனும் நான்தான்.அது 87ஆம் ஆண்டு. சாலையோர நொச்சிச் செடியை பார்த்து நான் எழுதிய கவிதை போன்ற ஒன்றை உளுந்தூர்பேட்டை ஐடிஐ சக பயிற்சியாளர்களால் ‘இதாண்டா கவிதை’ என பாராட்டிய போதே எனக்கு பெரும் கவிஞனாய் ஆகிவிட்ட பூரிப்பு. (ஆனால் அது எந்த இதழிலும் பிரசுரம் ஆகவில்லை). பிறகு கடலூரில் இருந்து வந்த “காகிதம்’’ என்ற சிற்றிதழில் எனது கவிதை முதன்முதலாய் அச்சில் வந்தது. ஆனால் கவிதைக்கும் கீழேயும், மேலேயும் என்பெயர் வரவில்லை. விட்டுவிட்டார்கள். ‘கண்மணிகுணசேகரன்’ என்கிற என் பெயரை கட்டாயம் அச்சில் பார்த்து விட வேண்டும் என்கிற அவலாசையை பூர்த்தி செய்தது ஒரு வார இதழில் வெளிவந்த அதிரடி கவிதைதான். ஆனால் அதை படித்த எனக்கு பெரும்பரபரப்போ, பெருமையோ ஏற்படவில்லை. எனக்குத் தெரிந்த இலக்கியர்கள் யாரும் அந்த இதழை படிக்கவில்லை. மீறி படித்திருந்தாலும் என் கவிதையை கடந்துதான் செல்ல வேண்டும் என்கிற தெரிந்த இலக்கியர்கள் யாரும் அந்த இதழை படிக்கவில்லை. மீறி படித்திருந்தாலும் என் கவிதையை கடந்துதான் செல்ல வேண்டும் என்கிற மாதிரி பெரிய கவிதையில்லை. சிட்டு முட்டை இட்ட மாதிரி துணுக்கு துணுக்கான சின்ன வரிகள். கண்ணில் தென்படாமல்கூட போய்விடும்.அய்யா பழமலய் அவர்களின் தொடர்பால், தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டிருந்த கவிதைகளை கேட்டு, கவிதைகளை வாங்கி அவரின் சிறு அறிமுகத்துடன் ‘அரங்கேற்றம்’ என்னும் இதழில் போட வைத்தார். பழமலய் அவர்களின் கரிசனத்தோடு கூடிய கவிதை என்பதால் கவனம் பெற்று, பலரும் பார்த்ததாய் சொன்னார்கள். முதன்முதலில் எனது கவிதை மற்றவர்களின் பார்வையில் பட்டு பிரசுரம் என்கிற தகுதியை பெற்றது, அரங்கேற்றம் இதழில்தான். அதிலும் ஒரு சிக்கல். பலரும் பார்த்ததாய் சொன்னார்களே தவிர அந்த இதழ் வெகுகாலம் வரை என் கண்ணில் கிடைக்காமல் போய், நிறைய கவிதைகள் எழுதியபின் பிற்காலத்தில் பார்க்கக் கிடைத்தது. கவிதையில் கொஞ்சம் கூடுதலாய் பழமலய் கை வைத்திருந்தார். ஆனாலும் தொடர்ச்சியான என் கவிதைகள் அவரின் மூலமாகவே (என் வேண்டுதலுக்கிணங்க) கவிதாசரண், நிகழ் போன்ற இதழ்களில் வெளியாயின. “இன்னும் என்னா கண்மணிகுணசேகரன் கவித பழமலய் உறையிலேயே வருது. நேரடியா அனுப்பலாமே’’ என உள்ளூர் இலக்கியவாதியிடம் கவிதாசரண் சொன்னதான சேதி அறிந்தேன்.எனது தலைமுறைக் கோபம் கவிதை தொகுப்பிற்கு பிறகு கதைகள் மேல் நாட்டம் ஓடியது எனக்கு. மண் சார்ந்த வாழ்வியலை மண்ணின் மொழியிலேயே எழுத வேண்டும் என்கிற பேராவல். உட்கார்ந்து சரசரவென ‘சருகு’ என்கிற ஒரு கதையை எழுதினேன். எங்கள் மணக்கொல்லையில் வாழ்கிற கலியன் என்பவர், வெற்றிலை சருகிற்காக படும் அவலத்தை சொல்கிற கதை அது.அழகாக கார்பன் வைத்து எழுதி படியை இறுத்திக் கொண்டு தெளிவான கையெழுத்துப் பிரதியை, கோவை புலமைப் பண்ணை வெளியிடும் தாராமதி இதழுக்கு அனுப்பி வைத்தேன். சிற்றதழில் ஆறேழு பக்கம் கொண்ட கதையை வெளியிடுவார்களா என்கிற பயத்தோடுதான் அனுப்பினேன். எனக்கு ஒரே ஆச்சரியம். அடுத்த இதழிலேயே கதை வந்திருந்தது. குட்டி குட்டி கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவனுக்கு, தொடர்ச்சியான ஐந்தாறு பக்க என் படைப்பைப் பார்த்த எனக்கு கைகால் புரியவில்லை. ஆனால் ஊனாடி படித்து பார்த்த நான் சப்பிட்டுப் போய்விட்டேன். எனது முந்திரிக் காட்டு வட்டார வழக்கில் இருந்த பல சொற்களை, தொடர்களை அப்படியே கோவை வட்டார சொல் வழக்காக அய்யா குன்றம் அவர்கள் மாற்றியிருந்தார். (என்னா நமக்கு தெரியாத பெரிய இந்த எழுத்த எழுதறானுவோ போடு கத்திய). இப்படித்தான் என் முதல் கதை பிரசுரமும் நிகழ்ந்தது.ஒரு படைப்பாளிக்கு ஒவ்வொரு படைப்பும் ஒரு பிரசவம் மாதிரியென்பார்கள். இதை வெறும் சொல்லாக கொள்ளாமல் கவிதை, கதை, நாவல் மற்றும் நடுநாட்டுச் சொல்லகராதியென இந்த பதினைந்து ஆண்டுகால படைப்பு பாணியில், ஒவ்வொரு வெளியீட்டின் போதும், ஒரு முதல் பிரசுரம் போலவே கண்டு பேருவுவகை கொள்கிறேன்.

நன்றி;கீற்று


இவரின் படைப்புகள்;
1.தலைமுறைகோபம்,
2.உய்ரிதண்ணீர்
3.அஞ்சலை
4.ஆதண்டார் கோயில் குதிரை
5.கோரை
6.பூரணி பொற்கலை
7.நெடுஞ்சாலை

Saturday, April 11, 2009

கம்பிகளை தாண்டி வீசும் காற்று


திமிங்கிலம்
ஆழ ஆழ
அது செல்கையில்
உயர உயர எழுகிறது
அதன் வால்!

(ஜென் கவிதை) -யோஸா பூஸன்.

கால வரலாற்றில் தேவை ஏற்படும் இயற்கையே தனக்காக தேவையை தானே உருவாக்கும். அப்படித்தான் அண்ணன் சீமான் உருவாகியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக சுதந்திர நாட்டில் தனது இனமானத்திற்கான கருத்தைப் பேசியதால் புதுச்சேரியின் நெடிய சிறை மதிர்ச்சுவர்களுக்கு ஊடே, பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இணையத் தமிழர் இயக்கம் சார்பாக 2-04-09 அன்று அண்ணன் சீமானை காண செல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான், தோழர் விஷ்ணுபுரம் சரவணன், ஒட்டக்கூத்தர், கவிஞர்.கண்ணகன், இணையத்தளங்களில் புதிய தமிழுணர்வாளராக உருவாகி வரும் வினோபா உட்பட தமிழுணர்வாளர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம்.

புதுவையில் அண்ணன் சீமானைக் காண புறப்பட்டபோது அருமைத் தோழர் நெல்லை அருள்மணி மதியம் 2 மணிக்கு வந்தால் அண்ணனை சந்திக்கலாம். இன்று வியாழக்கிழமை. ஆதலால் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற மகிழ்வான தகவலைத் தந்தார். நாங்கள் சரியாக 1.50 மணிக்கு சிறை வாசலுக்கு சென்று விட்டோம். அங்கு எங்களை தோழர் ஓட்டக்கூத்தர், பெரியார் திக அண்ணன் லோகு. அய்யப்பன், நெல்லை அருள்மணி ஆகியோர் எங்களை வரவேற்றனர். அங்கு சென்றவுடன் அண்ணன் சீமானைப் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற தகவல் எங்களை பேரிடியாக தாக்கியது.

தமிழ் பெரியவர் இறைக்குருவனார், இயக்குநர் அமீர் மற்றும் சீமானின் குடும்பத்தினர் யாவரும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளியே காத்திருந்தனர்.நான் சிறை வெளிவாயிலில் இருந்த வாயிற்காவலரிடம் அண்ணன் சீமானை காணவேண்டும் என்று கூறி அனுமதி கோரும் விண்ணப்ப படிவத்தினை கேட்டேன். மிகுந்த இறுக்கமான குரலில் யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவலர் கூறினார்.

நான் உங்கள் மேலதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று கேட்டபோது எனக்கு அதே இறுக்கமான பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது. பெரியார் தி.க அமைப்பாளர் அண்ணன் லோகு.அய்யப்பன் எங்களை எப்படியாவது உள்ளே அனுப்ப எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். புதுவை மாநில சிறைத்துறை ஐ.ஜிக்கு அண்ணன் லோகு அய்யப்பன் அலைபேசியில் பேசி தோல்வி அடைந்த நிலையில், என்னைப் பேசச் சொல்லி அலைபேசியை அளித்தார். கிட்டத்தட்ட அந்த வேற்று மாநில சிறைத்துறை அதிகாரியிடம் நான் எவ்வளவு பேசியும் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், தேர்தல் ஆணையத்திடமிருந்து சீமானை பார்க்க வரும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு வந்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் மூன்றே மூன்று பேருக்குத்தான் அனுமதி என்றும் கண்டிப்பாக கூறினார்.

மேலும் நேற்றைய தினம் வந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் மற்றும் பாமக தலைவர் கோ.கா.மணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை சொல்லி மறுத்தார்.பிறகு என்னை நான் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகும் இதே இழிபறி நிலை நீடித்தது. ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக சட்டம் சொல்லியுள்ள ஒரு நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க உரிமை உண்டு என்றும் மறுக்கும் பட்சத்தில் இது குறித்து தமிழுணர்வாளர்கள், வழக்கறிஞர்கள் மீண்டும் போராட துவங்குவார்கள் என்றும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும் என்றும் கடுமையான குரலில் நானும் விவாதிக்க ஆரம்பித்தேன். இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் நீண்டு கொண்டே இருந்தன. பிறகு அரைமணி நேரம் தொடர்ந்த உரையாடலின் முடிவில் வழக்கறிஞர்களை மட்டும் வழக்கு குறித்துப் பேச அனுமதிப்பதாக சலிப்பான குரலில் கூறினார்.

எங்களுடன் வந்திருந்த தமிழுணர்வாளர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பிறகு அங்கு இருந்தவர்கள் முதலில் வழக்கறிஞர்கள் என்ற முறைமையில் மணி.செந்திலும், வினோபாவும் மட்டுமாவது பார்த்து வரட்டும் என்று முடிவு எடுத்தனர். தோழர் நெல்லை அருள்மணி அங்கு இருந்த அனைவரிடமும் இருந்த புத்தகங்களைப் பெற்று என்னிடம் அளித்தார்.

தமிழ்ப் பெரியவர் இறைக்குருவனார் தான் எடுத்து வந்த பெருஞ்சித்திரனார் புத்தகங்களை ஏமாற்றத்துடன் கண்கள் பனிக்க என்னிடம் அளித்தார்.

சீமான் என்பவர் தனி மனிதன் அல்ல. தன் சொந்த சகோதர சகோதரிகளை காப்பாற்ற வழி தெரியாமல் தனக்குள்ளேயே சிதைந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் குரல் என்பதை அங்கு நின்ற தமிழ்உணர்வாளர்கள் அனைவரும் நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

நானும், வினோபாவும் அவசர அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு சிறையின் மிகப் பெரிய வாயிற் கதவின் வழியே உள் நுழைந்தோம்.நான் பிறந்தது முதல் இனத்திற்காக எவ்வித சமரசமுமின்றி போர்க்குரல் கொடுத்து, அனைத்து அதிகார மையங்களுக்கும் தன் வீரம் செறிந்த உரைகளினால் பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் சாசகம் நிறைந்த ஒரு புரட்சியாளரை சந்திக்க போவது இதுதான் முதல் முறை.

இன்று காலை நான் குடந்தையில் இருந்து கிளம்பியது முதலே மிகுந்த உணர்வுவயப்பட்ட நிலையில் இருந்தேன்.அண்ணனை சிறையில் காணப்போகும் ஆவலும், உணர்வும் என்னை வெகுவாக ஆட்டிப்படைக்க சிறைச்சாலையின் இரண்டாவது மிகப்பெரிய இரும்பு கதவுகளுக்கு முன்னால் போய் நின்றேன். கூட வந்த வினோபா அங்கிருந்த காவலரிடம் நாங்கள் வந்திருக்கும் நோக்கம் பற்றி சொன்னார். அதற்கு அங்கிருந்த யாரிடமும் எவ்வித பதிலுமில்லை. அதிகாரிகள் இல்லை என்றும், வழக்கறிஞர்கள் சந்திப்பது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மீண்டும் எங்களைத் தடுக்க துவங்கும் முயற்சியில் இறங்கியது புதுவை சிறைத்துறை. மீண்டும் அங்கேயும் விவாதம். அண்ணன் சீமானைப் பார்க்காமல் நாங்கள் சிறையை விட்டு வெளியே வர மாட்டோம், எங்களையும் இங்கேயே அடையுங்கள் என்று நாங்கள் இருவரும் உரத்தக் குரலில் விவாதிக்க துவங்கினோம். நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே போவதும், வருவதுமாக இருந்தனர். ஆலோசனைகள் செய்தனர். நாங்களும் தளராமல் அதிகார மையத்தின் அனைத்துப் பிரிவுகளோடும் போராடிய வண்ணம் நின்று கொண்டிருந்தோம்.இறுதியாக சீருடை அணியாத ஒரு அதிகாரி நீங்கள் போய் பார்க்கலாம்.

ஆனால் நிபந்தனை..

புத்தகங்கள் கொடுக்க கூடாது. வழக்கைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்றார்.என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. புத்தகங்கள் கூட கொடுக்க கூடாதென்றால்.... அப்படியென்ன சீமான் யாரும் செய்யக் கூடாத கடும் குற்றத்தை செய்து விட்டார் .. இனத்திற்காக, இன அழிவினைக் கண்டித்து ஒருவன் குரல் எழுப்பினால் அவ்வளவு பெரிய குற்றமா.. என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தேன். அதற்குள் கூட வந்த வினோபா முதலில் அண்ணனைப் பார்த்து விடுவோம். மீதத்தை வந்து வைத்துக்கொள்ளலாம் என்றார். அனைத்து விதமான பரிசோதனைகளுக்கு மத்தியில்... எங்களது அலைபேசிகள் வாங்கப்பட்டன.இறுதியாக எளிதாக திறக்காத அந்த மாபெரும் அடக்குமுறையின் சின்னமாய் உயர்ந்திருந்த இரும்புக் கதவு தந்தை பெரியாரின் வியர்வையினால் எங்களுக்கு கிடைத்த கல்விக்காக திறந்தது. உள்ளே மங்கலான வெளிச்சம். வரிசையாக அதிகாரிகளின் அறைகள். வேக வேகமாக நடந்து செல்லும் போதே ஒரு அறையில்.. வாருங்கள் வழக்கறிஞர்களே... என்ற குரல்..தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று எந்தக் குரல் உணர்வூட்டியதோ... என் தமிழுக்கு எதிரியை நிர்மூலமாக்கி சிதற அடிக்கும் வல்லமை உண்டு என்று எந்த குரல் நிருபித்ததோ.. பெரியாரையும், அம்பேத்காரையும், காரல் மார்க்ஸையும், தலைவர் பிரபாகரனையும் ஒரே அலைவரிசைக்குள் கொண்டு வந்து எந்த குரல் அசத்தி உயர்த்திக் காட்டியதோ.... மங்கி மக்காய் கிடந்த தமிழனை தன் அதட்டலால் எந்த குரல் மானமுள்ள போராளியாக்க துடித்ததோ ... அதே குரல்...குரல் கேட்டவுடன் எனக்கு முன்னால் பாய்ந்து போனார் வினோபா. அந்த நொடியிலேயே என் கண்கள் கலங்கத் துவங்கி விட்டன. தவிப்புடன், பதைபதைப்புடன் நானும் அந்த அறைக்குள் போனேன்.அங்குதான்.. தாயகத் தமிழகத்தில் இந்த தலைமுறையின் தன்னிகரற்ற போர் முரசு அண்ணன் சீமான் நின்றுக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் சென்ற வினோபா கைக் குலுக்கி கொண்டே நின்றார். நான் ஆச்சர்யமும், தவிப்பும், பதைபதைப்பும்... இன்னும் பிற அனைத்து விதமான உணர்வு கலவைகளோடும் நின்றுக் கொண்டிருந்தேன்.

ஒரு நொடி உற்று நோக்கிய பிறகு அண்ணன் வாடா என்று சொன்னதுதான் தாமதம்.. பாய்ந்து கட்டி அணைத்தேன். என் கண்களில் நான் தேக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்துக் கொண்டு வெள்ளமென பாய்ந்தது.ஒரு சிறைச்சாலையில்... சிறையில் அடைக்கப்பட்டவரை பார்க்கப் போன ஒரு வழக்கறிஞர் உணர்வினால் உந்தப்பட்டு கண்ணீர் சிந்துவதும், உணர்ச்சி வசப்படுவதும் என் தொழில் நியதிகளுக்கு முரணானதுதான். ஆனால் நான் அந்த இடத்தில் வழக்கறிஞராகவோ, அதிகாரத்தின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டவரை மீட்கப் போன மீட்பராகவோ... இருக்க முடியவில்லை. மாறாக அனைத்து விதமான சூழ்ச்சிகளுக்கும் சிக்கிக் கொண்டு, தன் கண் முன்னால் சொந்த சகோதர சகோதரிகளை பறிக்கொடுத்து... எல்லாவிதமான அரசியல் பித்தலாட்டத்தனங்களிலும் விற்கப்பட்டு... மீறி எழும் இனமான உணர்வினையும்.. சுய வாழ்க்கை நிர்பந்தங்களுக்காக அடக்கி, அடங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தின் உக்கிர வலியாய்... சூழ்ந்திருக்கும் இறுகிய இருட்டினில் துடித்தெழுந்த வெளிச்சத் தெறிப்பாய்... அண்ணன் சீமானின் தம்பியாகத்தான் என்னால் இருக்க முடிந்தது.என் புலன்கள் என்னையும் மீறி... ஆதிச்சுழியாய்.. சுனையாய் என்னுள் சுரந்து கொண்டிருக்கும் என் இன மூதாதையின் மிச்சமாய் இன்னும் என்னுள் ஒளிந்திருக்கும் உணர்வின் தொடர்ச்சிகளில் என்னை நான் ஒப்புக் கொடுத்துவிட்டேன். அண்ணனும் கலங்கி.. நானும் கலங்கி இருவரும் எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை உணர்ந்த அற்புத தருணம் அது.

அப்பா.. எப்படியிருக்கார்.. திமுககாரர் .. அவரிடம் வம்பு வளர்க்காத.. பாவம்டா அவரு..

என்று என் தந்தையைப் பற்றி நலம் விசாரிக்க துவங்கிய அண்ணன்.. அறிவுமதி அண்ணனைப் பற்றி பேச துவங்கியவுடன் மெளனமாக என்னை உற்று நோக்கினார். அண்ணனை பத்திரமாக பார்த்துக்குங்கடா... தினந்தோறும் தொலைபேசியில் அவருடன் பேசி அவரைத் தேற்று என்றார். தோழர் பாமரனின் விசாரித்தல்களை சொன்னபோது அவர் மிகவும் உற்சாகமாக பாமரனை பற்றி விசாரிக்க துவங்கினார்.எங்களைச் சுற்றிலும் காக்கி உடைகள் நாங்கள் பேசுவதை, கலங்குவதை கவனித்துக் கொண்டும், பதிவு செய்துக் கொண்டும் இருந்தன... நான் படித்த சட்டமும், பட்டமும் என் வாழ்நாளில் எனக்கு மிகவும் உபயோகப்பட்ட தினமாய் இதை நான் கருதுகிறேன் என்று அண்ணனிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சிரித்தார்.சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி, சீர்குலையச் செய்யும் என்பதை சீமான் முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டு இருந்தார். அவருடைய வருத்தமெல்லாம் ஒட்டுப் பொறுக்கி அரசியலில் சிக்கிக் கொண்டு ஈழத்து அவலங்களுக்கான தார்மீக எதிர்ப்புக் குரல் மங்கி விட்டதே என்று. தனக்கு யார் குறித்தும் வெறுப்போ, வருத்தமோ இல்லை என்றார் அண்ணன் சீமான். இன்று இன எதிரிகளை வெற்றிப் பெற விட்டோமானால் எதிர்காலம் என்ற ஒன்றே இந்த இனத்திற்கில்லை என்பதை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டோம். மேலும் உலகமெல்லாம் இருக்கின்ற தமிழுணர்வாளர்களை ஒரு இழையில் கொண்டு வர இணையத்தமிழர் இயக்கம் துவங்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் கேட்டார். உலகத் தமிழர்களுக்கும், இயக்கத்திற்கும் தன்னுடைய அன்பினையும், வாழ்த்துக்களையும் உவகையோடு சொன்னார் அந்த மாமனிதன். விடுதலைக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வினோபா பேசினார்.வெளியே பலரும் காத்துக் கொண்டிருக்கிற விபரமும், அவரது அண்ணன் மகள் யாழினி பிறந்த நாள் வாழ்த்து பெற வந்திருப்பதையும் அண்ணனிடம் சொன்னபோது அவரின் முகம் இறுகியது.சுற்றி நின்ற காவலர்களைப் பார்த்து ஏன் இப்படி என்னையும், என்னைப் பார்க்க வருகின்றவர்களையும் நடத்துகிறீர்கள்... அடிப்படை உரிமை கூட எனக்கு மறுக்கப்படுகிறது. தனிமைச் சிறை. புத்தகங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.. பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. முதலில் வியாழக்கிழமை என்றீர்கள். இப்போது வியாழக்கிழமை 3 பேர் மட்டும் அனுமதி என்கிறீர்கள். என் குடும்பத்தை பார்க்கக்கூட எனக்கு அனுமதியில்லை. .ஏன் இப்படி அனைத்து சட்ட விதிகளுக்கும் புறம்பாக நடந்துக் கொள்கிறீர்கள் என அண்ணன் கேட்டார்.அந்த சிறைச்சாலையில் அண்ணன் சீமானுக்கு உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி போகவும் கூட அனுமதியில்லை. தமிழினத்திற்காக மிகப் பெரிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார் அண்ணன் சீமான். எல்லாவிதமான அடிப்படை மனித உரிமைகளும் அவருக்கு அங்கே மறுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அவருக்கு மட்டும் சிறப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அங்கு உள்ள காவலர்கள் தெரிவித்தனர். அந்த உத்திரவின் நகலை கேட்டதற்கு அதையும் தர மறுத்து விட்டனர்.இதற்குள் வெளியே நின்ற விஷ்ணுபுரம் சரவணன், ஒட்டக்கூத்தர் உள்ளிட்ட தமிழுணர்வாளர்கள் வாயிலை மறைத்து போராட்டத்தை துவக்கி இருந்தனர். அதை தூரத்தில் இருந்து அந்த அறையில் இருந்த மிகச்சிறிய ஜன்னல் மூலம் அண்ணன் சீமான் பார்த்தார். அவர் மேலும் உணர்ச்சிவயப்பட துவங்கினார். என்னை பார்க்க வரும் என் உறவுகளை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்.. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்று காவலர்களிடம் அவர் கேட்டபோது அவர்களிடம் பதிலில்லை.எதற்கும் அவர்களிடத்தில் பதில் கிடையாது. பதில் தர வேண்டிய அதிகாரிகள் யாரும் அங்கில்லை.அவரது அண்ணன் மகள் யாழினிக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை ஒன்று எழுதி வைத்திருந்தார். அந்த தாளை என்னிடம் அளித்து, கொண்டு சென்று என் மகளிடம் கொடு என்றார். நானும் அதை பெற்று மடித்த போது.. மடிக்காமல் கொண்டு செல் என்றார் அந்த மயிலிறகு மனசுக்காரர்.நேரம் ஆகி விட்டது என அலுவலர்கள் தெரிவித்தனர். அண்ணனிடம் மீண்டும் கைக்குலுக்கி கொண்டோம். வீட்டில் உன் மகனிடம் பெரியப்பா விசாரித்தான் என சொல் என்று சொன்ன அந்த நேசமிகு உறவினை கண்கள் பனிக்கப் பார்த்து விட்டு மெதுவாய் அறையை விட்டு வெளியே வந்தேன்.வெளியே அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். நான் வெளியே நின்ற அதிகாரிகளிடம் அவர் நம்மை நேசித்த குற்றத்திற்காக உள்ளே இருக்கிறார். எனக்காகவும், உங்களுக்காகவும் தான் அவர் பேசினார். அந்த மாபெரும் மனிதனை உரிய மதிப்போடும், உரிமைகளோடும் நடத்துங்கள் என்றேன்.என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் அறைக்குள் சென்றேன். அண்ணன் சீமான் அமைதியாய் அமர்ந்திருந்தார். என்னடா தம்பி என கேட்டார். மீண்டும் அந்த மகத்தான சகோதரனை மீண்டும் இறுக்க கட்டி அணைத்தேன்.. நீங்கள் எங்களுக்கு வேண்டும்.. கொள்கையாய்.. வழிகாட்டியாய்.. ஆசானாய்.. உறவாய் என்றேன்.கண்டிப்பாக.. என் வாழ்க்கை என் தம்பிகளுக்காகத்தான் என்றான் அந்த பாசமிகு அண்ணன்.சிறை வெளியே தோழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர். நான் சீமானின் அண்ணன் மகள் யாழினிக்கு அவர் அளித்த கவிதையினை வாசித்து காண்பித்து அளித்தேன். அந்த பெண்ணும், அவரது தாயாரும் கதறி அழுதனர்.தோழர்களின் போராட்டம் வலுக்கவே..இறுதியாக மூவருக்கு மட்டும் பலவிதமான கெடுபிடிகளோடு அனுமதி தந்தது புதுவை சிறைத்துறை. இயக்குனர் அமீர், இறைக்குருவனார், யாழினி ஆகியோர் மட்டும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தனர்.எல்லாவித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் தேர்தலை மட்டுமே மனதில் வைத்து சீமானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கு எதிராக சீமானின் சிறை வாசம் இருக்கிறது.

காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல கலைஞர். மு.கருணாநிதிக்கு உரிமை இருக்கிறது என்றால்... ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல சீமானுக்கு உரிமை இல்லையா..?

விடுதலைப்புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் முழங்கலாம் என்றால்.... அதை ஆதரித்து சீமான் முழங்கக்கூடாதா?

இந்த நாட்டில் துரோகி கருணாவைப் பாராட்டி பேசினால் தவறில்லை. இந்த நாட்டின் எம்.பி. தனது மகளின் திருமணத்திற்காக இன எதிரி ராஜபக்சேவை அழைத்து வந்தால் தவறில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்காக ஒருவன் பேசினால் அது தவறு. உரிமைகளுக்காக ஒருவன் முழங்கினால் அது தவறு.மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு அறிவுலகத்தீரே... தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கும் கணவான்களே.. காஷ்மீருக்கு எல்லாம் சென்று ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களே... ஏனய்யா.. .உங்கள் கண்களில் சீமானின் கைது சிக்க மாட்டேன் என்கிறது.. அந்த மனிதன் உண்மையை பேசுகின்றான் என்பதாலா..? அவனின் உண்மையும், தியாகமும் ஏன் உங்களை உறுத்துகிறது? அந்த உறுத்தலின் வடிவம் தானே உங்களது மெளனம்?வண்டி கிளம்பியது. கனத்த மவுனத்துடன் அந்த சிறை மதிற்சுவர்களை பார்த்தேன். காற்று வேகமாக வீசியது.. அந்த காற்று.. .சிறை மதிற்சுவர்களை தாண்டியும் வீசும்.காற்றை கைது செய்ய முடியுமா என்ன?. -


மணி.செந்தில், கும்பகோணம் (advmsk1@gmail.com)

நன்றி :கீற்று

மணி-செந்தில்