Tuesday, September 11, 2007

அனுசரனை













எதுவும் பேசாமால்
பார்வையால் உரைத்துவிட்டு
போனாய் என் மீது இருந்த கோபத்தை

மாடிப்படி இறங்கியபோது
உன் மிதியடிகள் உண்டாக்கிய
சத்தம் ஒவ்வொன்றுக்கும்
சாபசொற்களின் சக்தி இருந்தது...

நான் நிதானமாகதான்
இருக்க முயற்சித்தேன்
எஞ்சித்திமிரிய
உன் அனுசரனைதான்
என்னை கிளறிவிட்டது.

என் ரத்ததை
புடைக்க வைத்தது
மென் வியர்வை பூத்த
உன் பெண்வாசந்தான்....

இனி எந்த பூவையும்
சூடிக்கொண்டு வராதே...
நீ....

முக்கியமாக பெண்ணாக வரவேண்டாம்
எனது வீட்டிற்கு...........


வீரமணி

No comments: