Monday, September 10, 2007

அடங்க மறுக்கும் திமிர்


பேரப்பிள்ளைகளை
பார்க்கபோன அப்பாவுக்கு
அக்கா
கேஸ் ஸ்டவ்வில்
சோறாக்கிப்போட்டதை
பெறுமைப்பொங்க சொன்னார்........

அடுப்புக்கு முள்ளுப்பொறுக்க போன
பெரிய வாய்க்கா மேட்டில்
செருப்பை தொலைத்ததற்காக
அக்காவை அடித்தது
ஞாபகத்துக்கு வந்திருக்குமாயெனத்
தெரியவில்லை அவருக்கு..............


வீரமணி

No comments: