Thursday, September 13, 2007

சந்தேகம்


பூத்துக்குலுங்குகிறது
உன்னைப்பற்றிய
என்கனவுப்பூக்காடு....
நட்சத்திரக்கண்கொண்டு
என் ரகசியங்களை
வேவுப்பார்க்கிறது
உன்நினைவு சரடுகள்...
ஆலமர விழுதாய்
கிளை தாங்குகிறது
நாம் சேர்ந்து வாழ்ந்த
சில நாட்களின் ஞாபகங்கள்....
எப்பொழுதாவது
உன் கணவன்
என்னை ஒத்த
சில்மிஷங்கள்
செய்யும்போது
என்னை நினைத்துக்கொள்ளாதே...
எனக்குப்பிரையேறினால்
என் மனைவி
சந்தேகிக்ககூடும் என்னை...
வீரமணி

No comments: